நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

FAMக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பது குறித்து 7 பாரம்பரிய வீரர்கள் பரிசீலித்து வருகின்றனர்

கோலாலம்பூர்:

எப்ஏஎம்க்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பது குறித்து 7 பாரம்பரிய வீரர்கள் பரிசீலித்து வருகின்றனர்.

பிபா எனும் அனைத்துலக கால்பந்து கூட்டமைப்பு சம்மேளனம் சம்பந்தப்பட்ட 7 வீரர்கள் மீது அபராதங்கள் இடை நீக்கங்களை விதித்தது.

இந்நிலையில் அவ்வீரர்கள் மலேசிய கால்பந்து சங்கத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பது குறித்து பரிசீலித்து வருகின்றனர்.

எப்ஏஎம் நிர்வாக ஊழியர்களால் ஆவணங்களை சமர்ப்பிக்கும் செயல்பாட்டில் ஏற்பட்ட தொழில்நுட்ப பிழையைத் தொடர்ந்து, வீரர்கள் ஒரு வருடத்திற்கு இடைநீக்கம் செய்யப்பட்டனர்.

இதைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்ட வீரர்கள் சட்ட நடவடிக்கை எடுப்பது குறித்து பரிசீலித்து வருவதாக கூறப்படுகிறது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset