நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

கடந்த கால தவறுகளை மீண்டும் செய்ய வேண்டாம்: பேரா சுல்தான்

ஈப்போ:

கடந்த கால தவறுகளை மீண்டும் செய்ய வேண்டாம் பேரா சுல்தான், சுல்தான்  நஸ்ரின் ஷா கூறினார்.

தேசிய ஒருமைப்பாடு திட்டத்தின் இலக்குகளுக்கும் நாட்டின் தற்போதைய யதார்த்தத்திற்கும் இடையிலான இடைவெளி குறைத்து, நாட்டின் திசையை சரிசெய்ய ஒரு கடுமையான நினைவூட்டலாக செயல்பட வேண்டும்.

கடந்த இரண்டு தசாப்தங்களாக பல்வேறு திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்ட போதிலும், ஒருமைப்பாடு பிரச்சினையை தீர்க்கத் தவறியதை ஆழமாகக் கவனித்ததில் இருந்து இந்த எச்சரிக்கை விடுக்கப்படுகிறது.

 நாம் நம்மை நேர்மையாகக் கேட்டுக்கொள்ள வேண்டும்: 

உண்மையில் அது அமைப்பின் வேர்களுக்குப் பரவியிருக்கும் போது, ​​எப்போது வரை பிரச்சினை தொடரும் என்பது கேள்விக்குறியாகும்.

21 ஆண்டுகளுக்கு முன்பு தூய நோக்கங்களுடன் பிறந்த தேசிய ஒருமைப்பாடு திட்டம், நம்பிக்கை வெளிப்படைத்தன்மையை அடிப்படையாகக் கொண்ட நிர்வாக கலாச்சாரத்தை நோக்கி நாட்டை நகர்த்த உதவும்.

இருப்பினும், ஊழல், அதிகார துஷ்பிரயோகம், கசிவு, குடும்ப உறவுகள், நிர்வாக அலட்சியம் ஆகியவை இன்னும் தலைப்புச் செய்திகளில் தொடர்ந்து இடம் பெற்று வருகின்றன என்று அவர் கூறினார். இது கவலையளிக்கிறது. இதிலிருந்து நாம் மீள வேண்டும் என்றார் அவர்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset