செய்திகள் மலேசியா
S.I.R.A.T இளைஞர் மாநாட்டை ஒட்டிய கால்பந்து போட்டியின் ஜெர்ஸி அறிமுகம்
கோலாலம்பூர்:
மலேசியாவின் மிகப் பெரிய இந்திய முஸ்லிம் இளைஞர் ஒன்று கூடல் 2025 நவம்பர் 22 அன்று, பினாங்கு மாநிலத்தின் பட்டர்வொர்த் நகரில் நடைபெற உள்ளது.
S.I.R.A.T 2025 எனும் முக்மின் அமைப்பின் ஒருங்கிணைப்பில் இதற்கான ஏற்பாடுகள் வெகு சிறப்பாக நடந்து வருகின்றன.
அந்த மாநாட்டை ஒட்டி சிலாங்கூர் இந்திய முஸ்லிம் இளைஞர்கள் அணிக்கும் பினாங்கு இந்திய முஸ்லிம் இளைஞர்கள் அணிக்கும் கால்பந்துப் போட்டி நடத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது.
அதற்கான ஜெர்சி அறிமுகத்தை கோலாலம்பூர் செய்யது உணவக மண்டபத்தில் இன்று அறிமுகம் செய்யப்பட்டது.
இந்திய முஸ்லிம் இளைஞர்கள் மாநாடு குறித்தும் கால்பந்து விளையாட்டின் நோக்கம் குறித்தும் முக்மின் ஒருங்கிணைப்பாளர் டத்தோ வீரா ஷாகுல் தாவூத் விளக்கினார்.
இந்த மாநாட்டை ஒட்டி நடத்தப்படும் விளையாட்டு வெற்றி தோல்வி என்ற அடிப்படையில் அமைந்தது அல்ல. மாறாக நட்பு முறையிலான ஒற்றுமைக்கான விளையாட்டு இது என்று டத்தோஸ்ரீ அக்மல் தெரிவித்தார்.
டத்தோ சிராஜ், துவான் மன் நூர் உட்பட முக்கிய பிரமுகர்களும் இரு அணியின் விளையாட்டாளர்களும் ஜெர்சி அறிமுக நிகழ்வில் கலந்து கொண்டனர்.
- ஃபிதா
தொடர்புடைய செய்திகள்
November 5, 2025, 8:53 pm
நாட்டின் கால்பந்து வீரர்களின் பிரச்சினையை ஒரு எடுத்துக்காட்டாக கொள்ளுங்கள்: சுல்தான் அப்துல்லா
November 5, 2025, 8:15 pm
ஆலயங்களுக்கான தர்ம மடானி திட்ட விண்ணப்பத்திற்கான காலக் கெடு நவம்பர் 19 வரை நீட்டிப்பு: மித்ரா
November 5, 2025, 3:29 pm
தைவானின் செல்வாக்கு மிக்க பெண் கொலை வழக்கில் நாம்வீக்கு 6 நாட்கள் தடுப்புக் காவல்
November 5, 2025, 1:16 pm
இந்திரா காந்தி வழக்கு: எந்தவொரு தாயும் தனது குழந்தையிடமிருந்து பிரிக்கப்படக்கூடாது: குலசேகரன்
November 5, 2025, 12:53 pm
61 மலேசிய மாணவர்கள் ஜகார்த்தா விமான நிலையத்தில் சிக்கித் தவிப்பு: சுற்றுலா முகவர் மீது போலிஸ் விசாரணை
November 5, 2025, 10:35 am
