நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

தைவானின் செல்வாக்கு மிக்க பெண் கொலை வழக்கில் நாம்வீக்கு 6 நாட்கள் தடுப்புக் காவல்

கோலாலம்பூர்:

தைவானில் செல்வாக்கு மிக்க பெண் கொலை வழக்கு நாம்வீக்கு 6 நாட்கள் தடுப்புக் காவல் விதிக்கப்பட்டுள்ளது.

டாங் வாங்கி மாவட்ட போலிஸ் தலைவர் சசாலி ஆடம் இதனை தெரிவித்தார்.

தைவானைச் சேர்ந்த ஹ்சீஹ் யூ ஹ்சினின் மரணம் தொடர்பான விசாரணையில் உதவுவதற்காக அவர் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

கோலாலம்பூரில் உள்ள டாங் வாங்கி மாவட்ட போலிஸ் தலைமையகத்தில் 42 வயதான நாம்வீக்கு எதிரான தடுப்புக் காவலில் வைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

நாம்வீ மீதான தடுப்புக் காவலில் வைக்க உத்தரவு இன்று நவம்பர் 5 முதல் நவம்பர் 10 வரை பிறப்பிக்கப்பட்டது.

சர்ச்சைக்குரிய கலைஞரான வீ மெங் சீ, இன்று அதிகாலை காவல் நிலையத்தில் சரணடைந்த பிறகு இது நடந்தது என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset