செய்திகள் மலேசியா
61 மலேசிய மாணவர்கள் ஜகார்த்தா விமான நிலையத்தில் சிக்கித் தவிப்பு: சுற்றுலா முகவர் மீது போலிஸ் விசாரணை
ஷா ஆலம்:
இந்தோனேசியாவின் சுகர்னோ-ஹட்டா சர்வதேச விமான நிலையத்தில் சுமார் மூன்று மணி நேரத்திற்கு மேல் சிக்கித் தவித்த 61 மலேசிய மாணவர்களைச் சார்ந்த சம்பவம் தொடர்பாக போலீஸ் விசாரணைத் தொடங்கியுள்ளது.
இதுவரை அந்தச் சம்பவம் குறித்து ஏழு போலீஸ் புகார்கள் பெறப்பட்டுள்ளன என்றும், சம்பவம் குற்றவியல் சட்டத்தின் கீழ் விசாரிக்கப்படுவதாக புக்கிட் அமான் வணிக குற்றத் தடுப்பு துறை இயக்குநர் டத்தோ ருஸ்டி முஹம்மத் இசா தெரிவித்தார்.
அக்டோபர் 23 அன்று மாணவர்கள் அந்த விமான நிலையத்தில் சுற்றுலா முகவர் நிறுவனத்தின் மேலாண்மை பிரச்சனையால் சிக்கித் தவித்தபோது, இந்தோனேசியாவில் உள்ள மலேசிய தூதரகம் உடனடி உதவி செய்தது என்று முன்னதாக ஹரியான் மெட்ரோ பத்திரிகை தெரிவித்திருந்தது.
சம்பவம் அறிந்தவுடன் தூதரகம் விரைவாக நடவடிக்கை எடுத்து, மலேசிய பிரஜையாகிய ஒரு உள்ளூர் சுற்றுலா முகவர் நிறுவனத்தின் உதவியுடன் மாணவர்கள் அனைவரும் விமான நிலையம் அருகே உள்ள ஓர் ஹோட்டலில் தங்க வைக்கப்பட்டதாக இந்தோனேசியாவிற்கான மலேசிய தூதர் டத்தோ சையத் முஹம்மத் ஹஸ்ரின் தெங்கு ஹுசின் தெரிவித்தார்.
இதற்கு முன்பு, சமூக ஊடகங்களில் பரவிய காணொலிகளில், மலேசிய மாணவர்கள் குழு ஒரு சுற்றுலா முகவர் நிறுவனத்தால் ஏமாற்றப்பட்டதாகக் கூறி, மதியம் விமான நிலையத்தில் இறங்கிய பின் மூன்று மணி நேரத்திற்கும் மேலாக காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டதாக தெரிவித்தனர்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
November 13, 2025, 5:50 pm
ஜொகூர் மாநில ஊடகவியலாளர்களுக்கு 1,000 ரிங்கிட் சிறப்பு ஊக்கத் தொகை: மந்திரி புசார் அறிவிப்பு
November 13, 2025, 5:45 pm
சபாவின் 40% உரிமைகள் கோரிக்கை மீதான ஏஜிசியின் முடிவுக்கு மாநில தேர்தல் காரணமாக இல்லை: பிரதமர்
November 13, 2025, 11:15 am
ஆர்டிஎஸ் இயங்கும் போது ஏற்படும் போக்குவரத்து சிக்கல்கள் கவலையளிக்கிறது: துங்கு இஸ்மாயில்
November 13, 2025, 11:14 am
ஜாலான் மஸ்ஜித் இந்தியாவில் வணிக வளாகங்கள் வழக்கம் போல் இயங்குகின்றன
November 13, 2025, 11:02 am
நவம்பர் 22 அணிவகுப்பில் தெங்கு மைமுன் பங்கேற்க வேண்டும்: இந்திரா காந்தி அழைப்பு
November 13, 2025, 8:37 am
சபா வருவாய் விவகாரத்தை எதிர்த்து மேல்முறையீடு செய்யாத முடிவை தேசிய முன்னணி வரவேற்கிறது: ஜாஹித்
November 12, 2025, 9:42 pm
ஆமாவா... உங்களுக்கு யார் சொன்னது?: பிரதமர்
November 12, 2025, 9:39 pm
இந்த ஆண்டு 55 மலேசியர்கள் போதைப்பொருள் கழுதைகள் என வெளிநாடுகளில் கைது செய்யப்பட்டனர்: ஹுசைன் ஒமார் கான்
November 12, 2025, 9:38 pm
வளர்ச்சி துரோகமாக மாறும்போது சிலாங்கூர் அரசின் வாக்குறுதிகள் நிறைவேறாமல் போகிறது: சார்லஸ் சந்தியாகோ
November 12, 2025, 9:36 pm
