செய்திகள் மலேசியா
உட்கட்சி பூசல்களை நிறுத்த பெர்சத்து உச்சமன்றம் முடிவு: மொஹைதின்
கோலாலம்பூர்:
உட்கட்சி பூசல்களை நிறுத்த பெர்சத்து கட்சியின் உச்சமன்றம் கூட்டாக முடிவு செய்துள்ளதாக.
அக்கட்சியின் தலைவர் டான்ஸ்ரீ மொஹைதின் யாசின் இதனை கூறினார்.
வரவிருக்கும் சபா மாநிலத் தேர்தலுக்கு முன்னதாக கட்சிக்குள் ஒற்றுமையை வலுப்படுத்தும் வகையில் எந்தவொரு உள் குழப்பத்தையும் முடிவுக்குக் கொண்டுவர வேண்டும்.
இதற்கு பெர்சத்து உச்ச மன்றம் ஒருமனதாக ஒப்புக் கொண்டுள்ளது.
நேற்று இரவு பெர்சத்து உச்சமன்றக் கூட்டத்தில் இந்த ஒப்பந்தம் எட்டப்பட்டது.
இதில் அனைத்து உறுப்பினர்களும் சமீப காலமாக எழும் அனைத்து பிரச்சினைகளையும் முந்தைய சர்ச்சைகளையும் உடனடியாக நிறுத்த வேண்டும் என்று ஒப்புக்கொண்டனர்.
இதனால் கட்சியின் கவனம் மக்கள் நலனிலும் தேர்தலுக்கான தயாரிப்புகளிலும் தொடர்ந்து இருக்கும்.
கூட்டம் அமைதியாகவும், முழுமையாகவும் நடந்து முடிந்தது. அனைத்து உறுப்பினர்களும் விரைவில் ஒருங்கிணைந்த, வலுவான சபையாக மீண்டும் இணைவதற்கு ஒரு வழியைக் கண்டுபிடிக்க ஒப்புக்கொண்டனர் என்று டான்ஸ்ரீ மொஹைதின் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
November 5, 2025, 1:16 pm
இந்திரா காந்தி வழக்கு: எந்தவொரு தாயும் தனது குழந்தையிடமிருந்து பிரிக்கப்படக்கூடாது: குலசேகரன்
November 5, 2025, 12:53 pm
61 மலேசிய மாணவர்கள் ஜகார்த்தா விமான நிலையத்தில் சிக்கித் தவிப்பு: சுற்றுலா முகவர் மீது போலிஸ் விசாரணை
November 5, 2025, 10:35 am
1 எம்டிபி நிதியுடன் நஜிப்பை தொடர்புபடுத்துவதற்கு உறுதியான ஆதாரங்கள் இல்லை: ஷாபி
November 5, 2025, 10:34 am
அமெரிக்காவில் யூபிஎஸ் சரக்கு விமானம் விபத்து: 3 பேர் மரணம்
November 5, 2025, 10:33 am
மலேசிய நகரத்தார்கள் வர்த்தக தொழில் துறைகளில் மீண்டும் முத்திரை பதிக்க வேண்டும்: டத்தோ இராமநாதன்
November 4, 2025, 11:20 pm
தர்ம மடானி திட்டம்; சமூக ஒற்றுமைக்கும் எதிர்கால நலனுக்கும் குணராஜ் முன்வைத்த அறைகூவலுக்கு மாமன்றம் ஆதரவு
November 4, 2025, 3:21 pm
