 
 செய்திகள் மலேசியா
பாங்கி தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கான திடலை விட்டுக் கொடுக்க மாட்டோம்; திடலை காக்க தொடர்ந்து போராடுவோம்: டத்தோ டி. மோகன்
பாங்கி:
பாங்கி தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கான திடலை விட்டுக் கொடுக்க மாட்டோம். திடலை காக்க தொடர்ந்து போராடுவோம்.
மஇகாவின் முன்னாள் உதவித் தலைவர் டத்தோ டி. மோகன் இதனை கூறினார்.
முன்பு பாங்கி லாமா புரூக் தோட்டம் என அழைக்கப்பட்ட இடத்தில் பாங்கி தமிழ்ப்பள்ளி அமைந்துள்ளது. கிட்டத்தட்ட 100 ஆண்டுகள் வரலாற்றை கொண்ட தமிழ்ப்பள்ளியாக இது விளங்குகிறது.
ஆனால் இப்பள்ளிக்கு என சொந்தமாக திடல் இல்லை. பள்ளிக்கு அருகே உள்ள தோட்ட திடலை தான் பள்ளி மாணவர்கள் பயன்படுத்தி வருகின்றனர்.
திடல் அமைந்துள்ள நிலம் தனியார் மேம்பாட்டு நிறுவனத்திற்கு செந்தமானது என்பதால் அதை பெற பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது. ஆனால் அம்முயற்சிகள் அனைத்தும் தோல்வியில் முடிந்தது.
இந்நிலையை அத் திடலை மூடுவதற்கான நடவடிக்கை சம்பந்தப்பட்ட நிறுவனம் மேற்கொண்டுள்ளது.
அத்திடலை பாதுக்காக்க வேண்டும். தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கான நிலத்தை விட்டுக் கொடுக்க மாட்டோம் என இன்று அமைதி போராட்டம் ஒன்று நடைபெற்றது.
தோட்டத்தின் முன்னாள் மக்கள், பெற்றோர்கள் என பலரும் இதில் கலந்து கொண்டனர்.
இப்போராட்டத்தில் நானுன் கலந்து கொண்டேன். குறிப்பாக அவர்களின் போராட்டத்திற்கு எனது முழு ஆதரவை வழங்கியுள்ளேன்.
காரணம் இந்த நாட்டில் நம் சமூதாயம் தொடங்கிதமிழ்ப்பள்ளி, ஆலயத்திற்கு எதுவும் எளிதாக கிடைத்து விடாது. போராடினால் மட்டுமே எதையும் சாதிக்க முடியும்.
அவ்வகையில் பாங்கி தமிழ்ப்பள்ளியின் திடலை பாதுக்காக்க நாங்கள் தொடர்ந்து போராடுவோம் என்று டத்தோ டி. மோகன் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
October 31, 2025, 6:06 pm
புனிதன் எம்ஐபிபி கட்சியின் உறுப்பினர் அல்ல; ஆண்டுக் கூட்டம் தொடர்பில் ஆர்ஓஎஸ்சிடம் புகார்: சந்திரசேகரன்
October 31, 2025, 2:54 pm
நஜிப் குற்றவாளியா அல்லது விடுதலை செய்யப்படுவாரா?: டிசம்பர் 26ஆம் தேதி தீர்ப்பு
October 31, 2025, 2:53 pm
ஹம்சாவை பதவி நீக்கம் செய்வது குறித்து ஆலோசனை பெற மொஹைதின் என்னை சந்திக்கவில்லை: துன் மகாதீர்
October 31, 2025, 2:52 pm
உலகளாவிய வடக்கு, தெற்கு நாடுகளுக்கு இடையிலான இடைவெளியை ஏபெக் குறைக்க வேண்டும்: பிரதமர்
October 31, 2025, 2:50 pm
கைகள் கட்டப்பட்டு நிர்வாண நிலையில் பெண் மரணம்: முன்னாள் காதலன், வளர்ப்பு சகோதரர் உட்பட 3 பேர் கைது
October 31, 2025, 2:10 pm
ஜெய்ன் ராயன் தாயார் இஸ்மானிராவுக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை: தண்டனையை உடனடியாகத் தொடங்க நீதிபதி உத்தரவு
October 31, 2025, 6:58 am

 
  
  
  
  
  
  
  
  
  
  
 