நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

2026 மலேசிய வருகை ஆண்டை முன்னிட்டு 30 மில்லியன் சுற்றுலாப் பயணிகள் கோலாலம்பூருக்கு வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது: மேயர்

கோலாலம்பூர்:

2026 மலேசிய வருகை ஆண்டை முன்னிட்டு 30 மில்லியன் சுற்றுலாப் பயணிகள் கோலாலம்பூருக்கு வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

கோலாலம்பூர் மாநகர் மன்றத் தலைவர் மேயர் டத்தோஸ்ரீ டாக்டர் மைமுனா முகமது ஷெரீப் கூறினார்.

2026 மலேசிய வருகை ஆண்டு  உடன் இணைந்து, மலேசியாவின் நுழைவாயிலாகவும் நாட்டின் சுற்றுலாவின் மையமாகவும் இருக்கும் கோலாலம்பூரை மொத்தம் 30 மில்லியன் உள்நாட்டு, சர்வதேச சுற்றுலாப் பயணிகள் இலக்கு வைக்கப்பட்டுள்ளது.

இதனால் ஆண்டு முழுவதும் பல்வேறு சுவாரஸ்யமான நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்படும்.

குறிப்பாக 2026 இன் கீழ் மொத்தம் 35 முக்கிய நிகழ்வுகள் திட்டமிடப்பட்டுள்ளன.

அவற்றில் அடுத்த ஆண்டு ஜனவரி முதல் டிசம்பர் வரை ஒவ்வொரு மாதமும் நடைபெறும் சமூக, கலாச்சார நிகழ்ச்சிகள் அடங்கும்.

ஆசியான் வட்டாரத்தில் மட்டுமல்ல, உலகளவில் சுற்றுலா மையமாக கோலாலம்பூரின் நிலையை மேலும் வலுப்படுத்த கோலாலம்பூர் மாநகர் மன்றம், சுற்றுலா அமைச்சு, சுற்றுலா துறை, தனியார் துறை, சமூகத்துடன் இணைந்து உறுதிபூண்டுள்ளது.

சமீபத்திய ஆசியான் உச்சிமாநாட்டை வெற்றிகரமாக நடத்தியதன் பின்னர் ஏற்பட்ட வேகத்திற்கு ஏற்ப,

2026 ஆம் ஆண்டில் மலேசியாவிற்கு 46 மில்லியன் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் அரசாங்கத்தின் திட்டத்திற்கு ஏற்ப 30 மில்லியன் பார்வையாளர்களின் இலக்கு உள்ளது என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset