செய்திகள் மலேசியா
அமெரிக்காவைப் பார்த்து நாம் பயந்தால், சீனாவுடன் எப்படி ஒப்பந்தத்தில் கையெழுத்திட முடியும்: பிரதமர்
கோலாலம்பூர்:
மலேசியாவும் ஆசியானும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பைப் பார்த்து பயப்படுவதாக சில தரப்பினர் கூறிய கூற்றுகளை தாம் மறுப்பதாக டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார்.
இன்று கையெழுத்தான ஆசியான்-சீனா சுதந்திர வர்த்தகப் பகுதி ஒப்பந்தத்தை அனைவரும் உதாரணமாக எடுத்துக் கொள்ள வேண்டும்.
குறிப்பாக மலேசியா உட்பட 11 நாடுகளின் ஒத்துழைப்பு கூட்டமைப்பு பயப்படவில்லை என்பதற்கான சான்று இந்த ஒப்பந்தமாகும்.
நாங்கள் அமெரிக்காவைப் பார்த்து பயந்தால், சீனாவுடன் எப்படி ஒப்பந்தத்தில் கையொப்பமிட முடியும்.
47ஆவது ஆசியான் உச்ச நிலை மாநாடு, தொடர்புடைய உச்ச நிலை மாநாடுகளின் நிறைவுடன் இணைந்து ஒரு செய்தியாளர் சந்திப்பின் போது அவர் இவ்வாறு கூறினார்.
இதற்கிடையில், மலேசியா ஒரு மிதமான அணுகுமுறையையும் மையத்துவத்தையும் பேணுகிறது என்று பிரதமர் வலியுறுத்தினார்.
அதாவது இந்த நாடு அனைவருடனும் இணையவும் நட்பாகவும் இருக்க முடியும் என்று அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
October 28, 2025, 9:36 pm
கோப்பெங் தமிழ்ப்பள்ளி கட்டடம் அடுத்தாண்டு கட்டப்படும்: தான் கா இங்
October 28, 2025, 7:03 pm
47ஆவது ஆசியான் உச்சி மாநாடு நிறைவடைந்தது: மலேசியா தலைமைப் பொறுப்பை பிலிப்பைன்ஸிடம் ஒப்படைத்தது
October 28, 2025, 7:01 pm
2026ஆம் ஆண்டு பள்ளி தவணை ஜனவரி 11ஆம் தேதி தொடங்குகிறது: ஃபட்லினா
October 28, 2025, 6:58 pm
தனது கணக்கில் 2.08 பில்லியன் ரிங்கிட்டை செலுத்த நஜிப் ஒருபோதும் உத்தரவிடவில்லை
October 28, 2025, 6:57 pm
அடுத்த ஆண்டு 70,000 இலவச ஹெல்மெட்டுகள் விநியோகிக்கப்படும்: அந்தோனி லோக்
October 28, 2025, 4:51 pm
அரசாங்கத்தின் உதவித்திட்டங்களில் மக்கள் பங்கேற்று இன்புற வேண்டும்: வ.சிவகுமார்
October 28, 2025, 2:18 pm
பேரா கம்போங் கப்பாயங் சிவஸ்ரீ சுப்பிரமணியர் ஆலயத்தில் கந்தர சஷ்டி விழா
October 28, 2025, 2:11 pm
