செய்திகள் இந்தியா
பொது இடத்தில் தொழுகை நடத்த குருகிராமில் தொடரும் எதிர்ப்பு
குருகிராம்:
இந்தியாவின் தொழில் நகரமான குருகிராமில் பொது வெளியில் வெள்ளிக்கிழமை தொழுகை நடத்துவதற்கு ஹிந்துக்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
வாரந்தோறும் போலீஸாரின் பாதுகாப்பில் இஸ்லாமியர்கள் தொழுகை நடத்தினாலும், ஹிந்துக்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபடுகின்றனர். அப்போது iஹிந்துக்கள் ஒன்றுகூடி தொழுகை நடத்தும் இஸ்லாமியர்களுக்கு எதிராக அவர்கள் யாகம் நடத்துகிறார்கள்.
குருகிராமில் பணியாற்றும் இஸ்லாமியர்களுக்கு வெள்ளிக்கிழமை தொழுகை நடத்த போதிய பள்ளிவாசல்கள் இல்லாததால் அங்குள்ள பூங்கா, விளையாட்டு திடல்களில் தொழுகை நடத்தி வருகிறார்கள்.
அவர்கள் தொழுகை நடத்த சீக்கியர்கள் இடமளிக்க முன்வந்தனர். ஆனால் அங்கும் ஹிந்துக்கள் சென்று எதிர்ப்பு தெரிவித்தால், அசம்பாவித சம்பவம் நடைபெற கூடாது என இஸ்லாமியர்கள் சீக்கியர்களின் உதவிக்கு நன்றி தெரிவித்து வந்துவிட்டனர்.
முன்னதாக, உள்ளூர்வாசிகளின் எதிர்ப்பால் குருகிராமில் வெள்ளிக்கிழமை தொழுகை நடைபெற்று வந்த 37 பொது இடங்களை 8-ஆக குருகிராம் நிர்வாகம் குறைத்தது. அங்கு மட்டும் போலீஸ் பாதுகாப்புடன் தொழுகை நடத்தப்பட்டு வருகிறது.
இதனால் வெள்ளிக்கிழமைதோறும் அப் பகுதியில் பரபரப்பு நிலவி வருகிறது. இந்தப் பிரச்சனைக்கு உடனடியாக அரசு தீர்வு காணாவிட்டால் பெரும் மோதல் ஏற்படும் நிலை உருவாகிவிடும் என்று அப்பகுதிவாசிகள் அச்சம் தெரிவிக்கின்றனர்.
தொடர்புடைய செய்திகள்
April 20, 2024, 8:44 pm
இஸ்ரேல், துபாய், தெஹ்ரான் விமான சேவையை ரத்து செய்தது ஏர் இந்தியா
April 19, 2024, 1:28 pm
பாஜக தேர்தல் அறிக்கையில் சிறுபான்மையினர் என குறிப்பிடப்பட்டவில்லை: அசாதுதீன் ஓவைசி
April 19, 2024, 1:04 pm
சிறைப்பிடிக்கப்பட்ட இஸ்ரேல் கப்பலில் இருந்து கேரளம் திரும்பிய பெண் மாலுமி
April 19, 2024, 11:10 am
மலேசியாவிலிருந்து சென்னைக்கு போலி கடப்பிதழில் வந்த பெண் உட்பட 2 பேர் கைது
April 18, 2024, 10:22 pm
ஹெலிகாப்டர், தனி விமான விவரங்களை தாக்கல் செய்ய தேர்தல் ஆணையம் உத்தரவு
April 18, 2024, 9:48 pm
ஊழலின் சாம்பியன் மோடி: ராகுல் காந்தி
April 18, 2024, 8:36 am
சத்தீஸ்கரில் 29 நக்ஸல்கள் சுட்டுக் கொலை
April 16, 2024, 10:54 pm
சல்மான் கான் வீட்டில் துப்பாக்கி சூடு நடத்திய 2 பேர் கைது
April 16, 2024, 10:49 pm