செய்திகள் உலகம்
ஒமிக்ரானால் தென் ஆப்ரிக்காவில் 4-ஆவது அலை
கேப் டவுன்:
ஒமிக்ரான் வகை கொரோனாவால் தென் ஆப்பிரிக்காவில் 4ஆவது அலை எழுந்துள்ளது.
இதுகுறித்து அந்த நாட்டு சுகாதாரத் துறை அமைச்சர் ஜோ பாஹ்லா கூறுகையில்,
ஒமிக்ரான் வேகமாகப் பரவும் தன்மை காரணமாக, நாடு முழுவதும் 4ஆவது கொரோனா அலை எழுந்துள்ளது.
நாட்டின் 9 மாகாணங்களில் அந்த வகை கொரோனா பரவல் கண்டறியப்பட்டுள்ளது.
எனினும், இந்த புதிய அலையால் அதிக உயிரிழப்புகள் ஏற்படாமல் தடுக்க முடியும் என்று நம்புகிறோம்.
ஒமைக்ரானை எதிர்கொள்ள இன்னும் சில நாள்களுக்கு கடுமையான பொதுமுடக்கக் கட்டுப்பாடுகளை அறிவிக்காமலேயே நம்மால் சமாளிக்க முடியும். எனினும், பொதுமக்கள் தடுப்பு விதிமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என்றார்.
தென் ஆப்பிரிக்காவில் கடந்த மாதம் 24ஆம் தேதி முதல்முறையாகக் கண்டறியப்பட்ட புதிய வகை கொரோனா, இந்தியா, அமெரிக்கா, பிரிட்டன், நெதர்லாந்து, டென்மார்க், ஜெர்மனி, இத்தாலி, ஆஸ்திரேலியா, ஹாங்காங், கனடா, தென் கொரியா, ஜப்பான், பிரான்ஸ், சவூதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், இலங்கை, சிங்கப்பூர் உள்பட சுமார் 40 நாடுகளுக்கும் பரவியுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
December 20, 2025, 3:06 pm
வங்கதேசத்தில் வன்முறை: மாணவர் சங்கத் தலைவர் சுட்டுக் கொல்லப்பட்டதால் பதற்றம்
December 20, 2025, 12:31 pm
தைப்பே சுரங்க ரயில் நிலையங்களில் தாக்குதல்: 4 பேர் பலி
December 20, 2025, 10:04 am
பிரவுன் பல்கலைக்கழக துப்பாக்கிச்சூடு எதிரொலி: கிரீன் கார்டு திட்டத்தை நிறுத்த டிரம்ப் உத்தரவு
December 19, 2025, 9:54 pm
ஆஸ்திரேலியத் தாக்குதலைத் தடுத்த அஹ்மதுக்கு $2.5 மில்லியன் நிதி
December 17, 2025, 1:41 pm
பாலஸ்தீன மக்கள் அமெரிக்காவிற்குள் நுழையத் தடை: அமெரிக்க அரசு அறிவிப்பு
December 15, 2025, 6:54 pm
சிறுநீரகப் பாதிப்பினால் அவதிப்படுவோர் எண்ணிக்கையில் உலகில் நான்காவது இடத்தில் உள்ளது சிங்கப்பூர்
December 15, 2025, 4:19 pm
ஆஸ்திரேலிய கடற்கரையில் தீவிரவாதியுடன் தனி ஒருவராக நின்று போராடிய அஹமது அல் அஹமது
December 14, 2025, 9:43 pm
ஆஸ்திரேலிய கடற்கரையில் துப்பாக்கிச் சூடு: 12 பேர் பலி
December 14, 2025, 6:33 pm
சிங்கப்பூரில் 2 பேருந்துகள் மோதல்: 44 பேர் மருத்துவமனையில் அனுமதி
December 13, 2025, 10:57 am
