நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மாணவர்களின் இலக்கவியல் பாதுகாப்பிற்காக பள்ளிகளில் போலிசாரின் கண்காணிப்பு நடவடிக்கைகளை ஆதரிக்கிறேன்: குணராஜ்

செந்தோசா:

மாணவர்களின் இலக்கவியல் பாதுகாப்பிற்காக பள்ளிகளில் போலிசாரின் கண்காணிப்பு நடவடிக்கைகளை ஆதரிக்கிறேன்.

செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் குணராஜ் ஜோர்ஜ் இதனை கூறினார்.

பள்ளிகளில் பாதுகாப்பு நடவடிக்கைகளை அதிகரிக்க உள்துறை அமைச்சும் போலிஸ்படையும் இணைந்து பல நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளனர்.

பள்ளிகளுக்கு வருவதுடன்  அதிகாரிகள் ரோந்து பணிகளையும் மேற்கொள்ளவுள்ளனர்.

இந்த நடவடிக்கை நமது இளைய தலைமுறை எதிர்கொள்ளும் தற்போதைய சவால்களுடன், குறிப்பாக சமூக ஊடகங்களின் தவறான பயன்பாடு, பகடிவதை, உணர்ச்சி துயரம், அதிகரித்து வரும் கவலைக்குரிய ஒழுங்குமுறை அறிகுறிகளுடன் மிகவும் ஒத்துப்போகிறது.

பள்ளிகளில் காவல்துறையின் இருப்பு அமலாக்க நோக்கங்களுக்காக மட்டுமல்ல, மாணவர்களுக்கு கல்வி, தடுப்பு, தார்மீக,  சமூக வழிகாட்டுதல் அணுகுமுறையின் ஒரு பகுதியாகும்.

ஆரம்பகால தகவல்களைப் பெறுவதற்கும், மாணவர்களின் சமூக சூழலைப் புரிந்துகொள்வதற்கும், பள்ளி, ஒழுங்குமுறை சிக்கல்கள், உணர்ச்சி துயரம், சாத்தியமான தவறான நடத்தைகளை ஆரம்ப கட்டத்திலிருந்தே அடையாளம் காண உதவும்.

அதற்கு ஒரு போலிஸ் அதிகாரி பள்ளி சமூகத்தின் ஒரு பகுதியாக வைக்கப்பட்டு உள்வாங்கப்பட வேண்டும் என்றும் நான் முன்மொழிகிறேன்.

இந்த நடவடிக்கை முன்கூட்டிய எச்சரிக்கை அமைப்பை வலுப்படுத்தி, மிகவும் பயனுள்ள தடுப்பு நடவடிக்கைகளை செயல்படுத்த உதவும்.

அதே நேரத்தில், இந்த முயற்சியை செயல்படுத்துவது ஆசிரியர்களுக்கு சுமையை சேர்க்கக்கூடாது என்று நான் கேட்டுக்கொள்கிறேன்.

ஆசிரியர்கள் தங்கள் முதன்மை கடமைகளான கற்பித்தல் மற்றும் கற்றல் ஆகியவற்றில் முழுமையாக கவனம் செலுத்த இடம் கொடுக்கப்பட வேண்டும்.

அதே நேரத்தில் பாதுகாப்பு, ஒழுக்கம், சமூக கண்காணிப்பு ஆகிய அம்சங்களை போலிஸ், ஆலோசகர்கள் மற்றும் பள்ளி சமூகம் இடையே நெருக்கமான ஒத்துழைப்பு மூலம் வலுப்படுத்த முடியும் என்று குணராஜ் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset