
செய்திகள் மலேசியா
பள்ளிகளுக்கு வருவதுடன் ரோந்து பணிகளை போலிசார் அதிகரிப்பார்கள்: சைபுடின்
கோலாலம்பூர்:
பள்ளிகளுக்கு வருவதுடன் ரோந்து பணிகளை போலிசார் உடனடியாக அதிகரிப்பார்கள்.
உள்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ சைபுடின் நசுதியோன் இதனை கூறினார்.
அரசாங்கத்தால் அறிமுகப்படுத்தப்பட்ட மாணவர்களுக்கான இலக்கவியல் பாதுகாப்புக் கொள்கையை ஆதரிக்கும் ஒரு நடவடிக்கையாக, உள்துறை அமைச்சு பள்ளிப் பகுதிகளில் ரோந்துப் பணிகளையும், போலிசாரின் இருப்பையும் அதிகரிக்கும்.
கல்வி, தடுப்பு, அமலாக்கத்தின் அம்சங்களை உள்ளடக்கிய ஒருங்கிணைந்த நடவடிக்கையின் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கை இருக்கும்.
ஒழுக்கம், இணைய பாதுகாப்பு குறித்து மாணவர்களுக்கு வழிகாட்டுவதில் பள்ளி தொடர்பு அதிகாரிகளின் பங்கை வலுப்படுத்தும்.
இதற்காக கல்வியமைச்சு, பெற்றோர் ஆசிரியர் சங்கம் ஆகியவற்றுடன் பாதுகாப்பு விழிப்புணர்வு பிரச்சாரங்களை தீவிரப்படுத்துவதும் மற்ற முக்கிய விவகாரங்களில் கவனம் செலுத்தும் என்று அவர் கூறினார்.
பள்ளிகள், சமூகங்களில் இளைஞர்களுக்கு ஏற்ற மனநல ஆதரவு அமைப்புகளை மேம்படுத்துதல், சாதனத் தவறான பயன்பாடு, இணையவழி மிரட்டல் எதிராக நிலையான நடவடிக்கையுடன் தெளிவான அமலாக்கத்தை மையமாகக் கொண்ட ஒரு விரிவான அணுகுமுறையை உள்துறை அமைச்சு ஆதரிக்கிறது என்று அவர் தெரிவித்தார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
October 18, 2025, 4:26 pm
சமூக ஊடக பயனர்களுக்கான வயது வரம்பை 16ஆக உயர்த்த அரசாங்கம் முன்மொழிகிறது: ஃபஹ்மி
October 18, 2025, 3:54 pm
மித்ராவில் பிரபாகரனின் பொறுப்பை நான் அபகரிக்கவில்லை: நாங்கள் இணைந்து செயல்படுவோம்: டத்தோஸ்ரீ ரமணன்
October 18, 2025, 3:38 pm
அனைத்து கொள்கைகளையும் இனக் கண்ணோட்டத்தில் பார்ப்பதில் நான் உடன்பட மாட்டேன்: பிரதமர்
October 18, 2025, 3:36 pm
தீபாவளி கொண்டாடும் வேளையில் வீடுகளை காலி செய்ய நோட்டீஸ்: சுபாங் கம்போங் பாடாங் தேம்பாக் மக்கள் குமுறல்
October 18, 2025, 11:20 am
கோத்தா மடானியின் கட்டுமானப் பணிகளை விரைவுபடுத்த வேண்டும்: பிரதமர் அன்வார்
October 18, 2025, 10:56 am
தனிநபர் கடன்களை அங்கீகரிப்பதில் ஊழல் செய்ததாக 16 வங்கி அதிகாரிகள் சந்தேகிக்கப்படுகிறார்கள்: எம்ஏசிசி
October 18, 2025, 10:40 am
பள்ளி துயரங்கள் தொடர்பில் கல்வியமைச்சை நோக்கி விரல் நீட்டுவது எந்த தீர்வுக்கும் வழிவகுக்காது: ரபிசி
October 17, 2025, 10:26 pm