நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

சமூக ஊடக பயனர்களுக்கான வயது வரம்பை 16ஆக உயர்த்த அரசாங்கம் முன்மொழிகிறது: ஃபஹ்மி

கோலாலம்பூர்:

சமூக ஊடக பயனர்களுக்கான வயது வரம்பை 16ஆக உயர்த்த அரசாங்கம் முன்மொழிகிறது.

தகவல் தொடர்பு அமைச்சர்  ஃபஹ்மி ஃபட்சில் இதனை கூறினார்.

நேற்று கூடிய அமைச்சரவை  ஆஸ்திரேலியா, இந்தோனேசியா போன்ற பல நாடுகளில் செயல்படுத்தப்பட்ட நடவடிக்கைகளுக்கு ஏற்ப,

மலேசியாவில் சமூக ஊடக பயனர்களுக்கான குறைந்தபட்ச வயது வரம்பை 13இல் இருந்து 16ஆக உயர்த்துவதற்கான திட்டத்தை விவாதித்தது.

இந்த நடவடிக்கை இளம் பயனர்களுக்கு சைபர் பாதுகாப்பு அபாயங்கள், தரவு தவறாகப் பயன்படுத்துதல், பொருத்தமற்ற உள்ளடக்கத்திற்கு ஆளாகுதல் ஆகியவற்றிலிருந்து பாதுகாப்பை வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

புதிய வயது வரம்பை செயல்படுத்துவது, பயனரின் உண்மையான வயதை சரிபார்க்க அடையாள அட்டை, கடப்பிதழ், மை டிஜிட்டல் ஐடி போன்ற அதிகாரப்பூர்வ அரசாங்க ஆவணங்களைப் பயன்படுத்தி பதிவு முறை மூலம் மேற்கொள்ளப்படும்.

கூடுதலாக டச் அண்ட் கோ இவாலட், கிராப் போன்ற தளங்களில் பயன்படுத்தப்படும் மின்னணு Know Your Customer (eKYC) அமைப்பைப் பயன்படுத்தப்படும்.

இதன்  அடிப்படையில், தொழில்நுட்ப, பாதுகாப்பு செயல்படுத்தல் அம்சங்களை ஆராய, பேங்க் நெகாரா மலேசியா, தொடர்புடைய தரப்பினருடன் மேலும் விவாதங்களை நடத்தவும் அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.

இந்த நடவடிக்கை நாட்டின் டிஜிட்டல் சுற்றுச்சூழல் அமைப்பை வலுப்படுத்துவதற்கான அரசாங்கத்தின் முயற்சிகளின் ஒரு பகுதியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இது பாதுகாப்பானது, பொறுப்பானது, சமூக நல்வாழ்வில் கவனம் செலுத்துகிறது.

குறிப்பாக இளைய தலைமுறையினரிடையே இது முக்கியமானது என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset