செய்திகள் தமிழ் தொடர்புகள்
மதுரையில் பரபரப்பு: ஏடிஎம் இயந்திரம் தீபற்றிக் கொண்டதால் பல லட்சம் சாம்பல்
மதுரை:
மதுரையில் ஏடிஎம் மையத்தில் ஏற்பட்ட தீவிபத்தில் பல லட்சம் ரூபாய் ரொக்க பணம் எரிந்து சாம்பலானது.
மதுரை, கீரைத்துறை அருகே புது மாகாளிப்பட்டி பகுதியில் தேசியமயமாக்கப்பட்ட வங்கிக்கு சொந்தமான ஏடிஎம் மையம் செயல்பட்டு வந்தது.
நேற்று காலை இங்குள்ள ஏடிஎம் இயந்திரத்தில் இருந்து திடீரென புகை வௌியானது. சிறிது நேரத்தில் மளமளவென தீப்பிடித்து ஏடிஎம் இயந்திரம் உள்ள அறை முழுவதும் எரிந்தது. இதனால் அப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
இதையடுத்து தீவிபத்து குறித்து அப்பகுதி மக்கள் அளித்த தகவலின்படி, அனுப்பானடி தீயணைப்பு நிலையத்தில் இருந்து வீரர்கள் விரைந்து வந்து, தீயை அணைத்தனர்.
இருப்பினும் ஏடிஎம் இயந்திரம், அதனுள் இருந்த பல லட்சம் ரூபாய் ரொக்கம் மற்றும் ஏடிஎம் மைய அறை முற்றிலும் எரிந்து நாசமானது.
ஏசி இயந்திரத்தில் ஏற்பட்ட மின் கசிவே தீ விபத்துக்கு காரணம் என முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. இருப்பினும் ஏடிஎம் மையம், அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை கைப்பற்றி தெற்குவாசல் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
December 12, 2025, 5:22 pm
பனிமூட்டம் காரணமாக விமானம் ரத்தானால் முழுக் கட்டணம் திருப்பி தரப்படும்: ஏர் இந்தியா அறிவிப்பு
December 12, 2025, 3:55 pm
ஊட்டியில் இதுவரை குயின் ஆப் சைனா பூக்கவில்லை: சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம்
December 11, 2025, 9:38 am
நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் தானே முன்வந்து பதவி விலகவேண்டும்: திருமாவளவன்
December 9, 2025, 11:00 am
சென்னை விமான நிலையத்தில் 71 விமான சேவை ரத்து: 7-ஆவது நாளாக தவித்த பயணிகள்
December 7, 2025, 11:18 pm
நாளை முதல் 6 நாட்களுக்கு தமிழத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு
December 6, 2025, 4:15 pm
இண்டிகோ விமானங்கள் ரத்து: சென்னையில் பயணிகள் போராட்டம்
December 2, 2025, 6:03 pm
தஞ்சாவூர் மாவட்டத்தில் கனமழையால் ஒரே நாளில் 80 வீடுகள் இடிந்து சேதம்
November 30, 2025, 3:57 pm
எஸ்ஐஆர் படிவம் வழங்க கால அவகாசம் டிசம்பர் 11 வரை நீட்டிப்பு
November 30, 2025, 12:36 pm
