செய்திகள் தமிழ் தொடர்புகள்
ஊட்டியில் இதுவரை குயின் ஆப் சைனா பூக்கவில்லை: சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம்
ஊட்டி:
ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் குயின் ஆப் சைனா என அழைக்கப்படும் பவுலோனியா பார்சினி மலர் மரங்கள் பராமரிக்கப்பட்டு வருகிறது. ஆண்டு தோறும் டிசம்பர் மாதத்தில் இந்த மரத்தில் மலர்கள் பூத்துவிடும். வெண்மை கலந்த இளஞ்சிவப்பு நிறத்தில் மரம் முழுவதும் பூத்து காணப்படும்.
இதனை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்து செல்வது வழக்கம். ஆனால், இம்முறை கடந்த ஜூன் மாதம் துவங்கிய மழை இதுவரை விட்டபாடில்லை. கடந்த சில மாதங்களாக மேக மூட்டமும் சாரல் மழையும் பெய்து வந்தது.

இதனால் இதுவரை ஊட்டியில் உறை பனி விழாமல் உள்ளது. வழக்கமாக பனிக்காலம் துவங்கினால் டிசம்பர் மாதம் முதல் வாரத்தில் புவுலோனியா பார்சினி மலர்கள் பூத்துவிடும்.
ஆனால், மழை காரணமாக இம்முறை இதுவரை பூக்காமல் உள்ளது. இதனால், தாவரவியல் பூங்கா வரும் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
December 12, 2025, 5:22 pm
பனிமூட்டம் காரணமாக விமானம் ரத்தானால் முழுக் கட்டணம் திருப்பி தரப்படும்: ஏர் இந்தியா அறிவிப்பு
December 11, 2025, 9:38 am
நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் தானே முன்வந்து பதவி விலகவேண்டும்: திருமாவளவன்
December 9, 2025, 11:00 am
சென்னை விமான நிலையத்தில் 71 விமான சேவை ரத்து: 7-ஆவது நாளாக தவித்த பயணிகள்
December 7, 2025, 11:18 pm
நாளை முதல் 6 நாட்களுக்கு தமிழத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு
December 6, 2025, 4:15 pm
இண்டிகோ விமானங்கள் ரத்து: சென்னையில் பயணிகள் போராட்டம்
December 2, 2025, 6:03 pm
தஞ்சாவூர் மாவட்டத்தில் கனமழையால் ஒரே நாளில் 80 வீடுகள் இடிந்து சேதம்
November 30, 2025, 3:57 pm
எஸ்ஐஆர் படிவம் வழங்க கால அவகாசம் டிசம்பர் 11 வரை நீட்டிப்பு
November 30, 2025, 12:36 pm
