செய்திகள் தமிழ் தொடர்புகள்
தஞ்சாவூர் மாவட்டத்தில் கனமழையால் ஒரே நாளில் 80 வீடுகள் இடிந்து சேதம்
தஞ்சாவூர்:
தஞ்சாவூர் மாவட்டத்தில் கடந்த 3 நாட்களாக மழை பெய்து வந்த நிலையில், நேற்று ஒரே நாளில் பல்வேறு இடங்களில் 80 வீடுகள் இடிந்து சேதமடைந்தன. மேலும், 65 கால்நடைகள் உயிரிழந்தன.
டிட்வா புயல் காரணமாக தஞ்சாவூர் மாவட்டத்தில் கடந்த 3 நாட்களாக பலத்த மழை பெய்தது. தொடர் மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
தொடர்ந்து, நேற்று காலை மழை இல்லாத நிலையில், பிற்பகலில் சிறிது நேரம் வெயில் அடித்தது.
பின்னர், லேசான தூறல் இருந்தது. இந்தத் தொடர் மழையால் மாவட்டத்தில் 15,000 ஏக்கர் நெற்பயிர்கள் மழைநீரில் மூழ்கின.
வயல்களில் தேங்கிய மழைநீர் வடிவதற்கு ஏதுவாக கல்லணையில் இருந்து காவிரி, வெண்ணாறு, கல்லணைக் கால்வாய் ஆகியவற்றில் பாசனத்துக்குத் திறக்கப்படும் நீரின் அளவு குறைக்கப்பட்டுள்ளதால், நீர் வேகமாக வடிந்து வரும் நிலையில், 2 ஆயிரம் ஏக்கர் நெல் வயல்களில் மழைநீர் வடியாமல் தேங்கி பயிர்கள் அழுகி வருகின்றன.
இதேபோல, 200 ஏக்கர் தோட்டக்கலைப் பயிர்களும் மழைநீர் தேங்கி பாதிக்கப்பட்டுள்ளன.
தொடர் மழை காரணமாக தஞ்சாவூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் முதல் நேற்று வரையிலான ஒரே நாளில் 46 குடிசை வீடுகள், 34 கான்கிரீட் வீடுகள் என மொத்தம் 80 வீடுகள் இடிந்து சேதமடைந்தன. இதில் மக்கள் யாரும் பாதிக்கப்படவில்லை. மேலும், 65 கால்நடைகள் உயிரிழந்துள்ளன என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
தஞ்சாவூர் அருகே நாஞ்சிக்கோட்டை, வல்லுண்டாம்பட்டு, அதினாம்பட்டு ஆகிய கிராமங்களில் போர்வெல் மூலம் சாகுபடி செய்யப்பட்டுள்ள 100 ஏக்கர் தாளடி இளம் நெற்பயிர்களும் மழைநீர் தேங்கி அழுகும் நிலையில் உள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.
தஞ்சாவூர் மாவட்டத்தில் நேற்று காலை 8.30 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக அய்யம்பேட்டையில் 10 மில்லி மீட்டர் மழை பதிவானது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
February 25, 2026, 7:19 am
புதிய கட்சியை தொடங்கினார் சசிகலா: கட்சிக் கொடியில் அண்ணா, எம்ஜிஆர், ஜெ. உருவம்
February 24, 2026, 3:34 pm
சூடுபிடிக்கும் தமிழக தேர்தல் களம்: ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ.10,000: எடப்பாடி பழனிசாமி அதிரடி அறிவிப்பு
February 21, 2026, 11:33 pm
தேர்தல் வெற்றிக்குப் பின் அதிகாரப் பகிர்வு பற்றி பேசலாம்: திருமாவளவன்
February 20, 2026, 1:58 am
காற்று மாசு ஏற்படுத்தும் வாகனங்களுக்கு ரூ.25,000 அபராதம் விதிக்கப்படும்: சென்னை மாநகராட்சி எச்சரிக்கை
February 16, 2026, 12:01 am
ஆளுநர் மாளிகையை முற்றுகையிடச் சென்ற தமிழக காங். தலைவர் செல்வப்பெருந்தகை உள்ளிட்ட காங்கிரஸார் கைது
February 14, 2026, 10:17 am
சேலம் தவெக கூட்டத்தில் மயங்கி விழுந்த இளைஞர் சிராஜ் உயிரிழந்தார்
February 14, 2026, 10:01 am
