
செய்திகள் மலேசியா
இந்திய சமூகத்திற்கு 42 மில்லியன் ரிங்கிட்டுக்கும் அதிகமான மதிப்புள்ள பல்வேறு திட்டங்களை அரசாங்கம் கொண்டுள்ளது: பிரதமர்
கோலாலம்பூர்:
இந்திய சமூகத்திற்கு 42 மில்லியன் ரிங்கிட்டுக்கும் அதிகமான மதிப்புள்ள பல்வேறு திட்டங்களை அரசாங்கம் கொண்டுள்ளது.
பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இதனை தெரிவித்தார்.
இந்திய சமூகத்தின் நலனுக்காக அரசாங்கம் பல்வேறு திட்டங்களை அரசாங்கம் மேற்கொண்டு வருகிறது.
இதன் அடிப்படையில் 42.25 மில்லியன் மில்லியன் மதிப்புள்ள பல புதிய திட்டங்களை அரசாங்கம் செயல்படுத்த உள்ளது.
பெரந்தி சிஸ்வா முயற்சி மூலம் இலவச கல்வித் திட்டம், மடிக்கணினிகள் வழங்குதல் ஆகியவை இந்த முயற்சிகளில் அடங்கும்.
மித்ராவின் கீழ் பள்ளி மேம்பாட்டுத் திட்டத்தையும் உள்ளடக்கிய இந்த முயற்சிகளாகும்.
நேற்று பிரிக்பீல்ட்ஸில் உள்ள மெட்ராஸ் பேக்கரியில் தமிழ் ஊடகவியலாளர்களுடனான சந்திப்பின் போது பிரதமர் இதனை பகிர்ந்து கொண்டார்.
தமிழ் ஊடகவியலாளர்களுடன் மதிய தேநீர் அருந்தும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது.
அதே நேரத்தில் பல்வேறு தற்போதைய பிரச்சினைகள் குறித்து கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டேன்.
கூடுதலாக பிரிக்பீல்ட்ஸ் தீபாவளி சந்தையில் உள்ள பல கடைகளில் தீபாவளிக்கு முன்னதாக இந்திய சமூகத்தினரின் ஏற்பாடுகளையும் பார்வையிட்டேன் என்று அவர் நேற்று இரவு ஒரு பேஸ்புக் பதிவில் பிரதமர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
October 17, 2025, 3:32 pm
ரஹ்மா உதவித் தொகையின் 4ஆம் கட்ட விநியோகம் நாளை தொடங்குகிறது: 8.8 மில்லியன் பேர் பயனடையவுள்ளனர்
October 17, 2025, 11:37 am
சபா தேர்தல்: தேமு, நம்பிக்கை கூட்டணி இடையிலான தொகுதிகள் நாளை இறுதி செய்யப்படும்: பூங் மொக்தார்
October 17, 2025, 10:27 am
மாணவர் ஒழுக்கம், பாதுகாப்பு பிரச்சினைகள் குறித்து அமைச்சரவை இன்று முடிவெடுக்கும்: பிரதமர் அன்வார்
October 17, 2025, 9:37 am
சிறப்புக் கல்வி பெறும் மாணவர் இன்ஃப்ளூயன்ஸா ஏ தொற்றால் மரணமடைந்தார்: மாவட்ட போலிஸ் தலைவர் விஜயராவ்
October 17, 2025, 9:28 am