
செய்திகள் மலேசியா
பேரா இந்தியர் வர்த்தக சபை தலைவராக கேசவன் முனுசாமி போட்டியின்றி ஏகமனதாக தேர்வு
ஈப்போ:
பேரா வர்த்தக சபையின் தலைவராக கேசவன் முனுசாமி போட்டியின்றி ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டார்.
நேற்று முன்தினம் பேரா இந்தியர் வர்த்தக சபை மண் டபத்தில் 2025ஆம் ஆண்டு பொதுக் கூட்டம் நடைபெற்றது.
பொதுக் கூட்டத்தை தொடர்ந்து அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு சபையை வழி நடத்துவதற்கு பொறுப்பாளர்கள் தேர்வு நடை பெற்றது.
இத்தேர்தலில் தலைவர் பதவிக்கு உயர்திரு கேசவன் முனுசாமி வேட்புமனு மட்டுமே பெறப்பட்டதால் தலைவராக போட்டியின்றி ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டார்.
துணைத் தலைவர் பதவிக்கு இருவர் போட்டியிட்டனர். இதில் ரவி சங்கர் தேர்வு பெற்றார்.
சபையின் உதவித் தலைவர் பதவிக்கு போட்டியில்லாததால் ஏகாம்பரம் தேர்வு செய்யப்பட்டார்.
செயலாளர் பதவிக்கு இருவர் போட்டியிட் டனர் அதில் உதயசூரியன் வெற்றி பெற்றார்.
துணைச் செயலாளர் பதவிக்கு இருவர் போட்டியிட்டனர் அதில் சுந்தர் வெற்றிப் பெற்றார்.
பொருளாளர் பதவிக்கு இருவர் போட்டியிட்டனர் அதில் நந்தகுமார் வெற்றிப் பெற்றார்.
செயற்கு ழுவினர்களாக ஐவர்
போட்டியின்றி ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டார்கள்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
October 14, 2025, 10:04 pm
பண்டார் உத்தாமா பள்ளி நிர்வாகத்தினர் விசாரணைக்காக கல்வி இலாகாவுக்கு மாற்றப்பட்டுள்ளனர்
October 14, 2025, 10:03 pm
டெங்கில் பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் வங்காளதேச தொழிலாளி உயிரிழந்தார்
October 14, 2025, 10:02 pm
மாணவனின் கைகளில் இருந்து கத்தி, கெராம்பிட் என இரண்டு ஆயுதங்களை போலிசார் கண்டுபிடித்தனர்
October 14, 2025, 9:53 pm
பள்ளிகளில் அதிகரிக்கும் வன்முறை, மாணவர்கள் மனநல பிரச்சினைகள்; உடனடி நடவடிக்கைகள் தேவை: அர்விந்த்
October 14, 2025, 9:35 pm
சித்தியவானில் வசதி குறைந்த 280 மாணவர்களுக்கு தீபாவளி அன்பளிப்புகள்: சினிமா நடிகர்கள் பங்கேற்பு
October 14, 2025, 6:27 pm
ஆலய வளாகத்தில் கோழி, ஆடு, மீன் விற்பனை: தெப்ராவ் கெஅடிலான் கண்டனம்
October 14, 2025, 6:25 pm
காதல் உணர்வை நிராகரித்ததால் கோபமடைந்த சந்தேக நபர் மாணவியை கத்தியால் குத்தியதாக கூறப்படுகிறது
October 14, 2025, 5:33 pm