
செய்திகள் மலேசியா
காதல் உணர்வை நிராகரித்ததால் கோபமடைந்த சந்தேக நபர் மாணவியை கத்தியால் குத்தியதாக கூறப்படுகிறது
பெட்டாலிங்ஜெயா:
காதல் உணர்வை நிராகரித்ததால் கோபமடைந்த சந்தேக நபர் மாணவியை கத்தியால் குத்தியதாக கூறப்படுகிறது.
சம்பவத்தை நேரில் பார்த்த ஒரு மாணவர் இதனை கூறியுள்ளார்.
இங்குள்ள பண்டார் உத்தாமாவில் உள்ள ஒரு பள்ளியில் கத்திக்குத்து சம்பவம் 16 வயது மாணவி மரணமடைந்தார்.
இச்சம்பவத்தில் கைது செய்யப்பட்ட 14 வயது சந்தேக நபர், பாதிக்கப்பட்டவர் தனது உணர்வுகளை நிராகரித்ததால் இவ்வாறு செயல்பட்டதாகக் கூறப்படுகிறது.
தாக்குதலுக்கு முந்தைய நாள் இரவு சந்தேக நபர் பாதிக்கப்பட்டவரிடம் தனது உணர்வுகளை தெரிவித்துள்ளார்.
ஆனால் 16 வயது மாணவி அதே உணர்வு இல்லாததால் அவரை நிராகரித்ததாகவும் கூறினார்.
சந்தேக நபர் பல கூர்மையான பொருட்களைக் கொண்டு, பாதிக்கப்பட்டவரை பெண்கள் கழிப்பறைக்கு பின்தொடர்ந்து சென்று, பின்னர் ஒரு அறையில் தாக்கினார்.
அவர் ஒரு கத்தியை வைத்திருந்தார். பாதிக்கப்பட்டவரை கழிப்பறையில் பிணைக் கைதியாக வைத்திருந்தார்.
பின்னர் அவர் அவளை மீண்டும் மீண்டும் குத்தத் தொடங்கினார் என்று பெயர் குறிப்பிட மறுத்த மாணவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
October 14, 2025, 10:04 pm
பண்டார் உத்தாமா பள்ளி நிர்வாகத்தினர் விசாரணைக்காக கல்வி இலாகாவுக்கு மாற்றப்பட்டுள்ளனர்
October 14, 2025, 10:03 pm
டெங்கில் பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் வங்காளதேச தொழிலாளி உயிரிழந்தார்
October 14, 2025, 10:02 pm
மாணவனின் கைகளில் இருந்து கத்தி, கெராம்பிட் என இரண்டு ஆயுதங்களை போலிசார் கண்டுபிடித்தனர்
October 14, 2025, 9:55 pm
பேரா இந்தியர் வர்த்தக சபை தலைவராக கேசவன் முனுசாமி போட்டியின்றி ஏகமனதாக தேர்வு
October 14, 2025, 9:53 pm
பள்ளிகளில் அதிகரிக்கும் வன்முறை, மாணவர்கள் மனநல பிரச்சினைகள்; உடனடி நடவடிக்கைகள் தேவை: அர்விந்த்
October 14, 2025, 9:35 pm
சித்தியவானில் வசதி குறைந்த 280 மாணவர்களுக்கு தீபாவளி அன்பளிப்புகள்: சினிமா நடிகர்கள் பங்கேற்பு
October 14, 2025, 6:27 pm
ஆலய வளாகத்தில் கோழி, ஆடு, மீன் விற்பனை: தெப்ராவ் கெஅடிலான் கண்டனம்
October 14, 2025, 5:33 pm