
செய்திகள் மலேசியா
மாணவி கொலை வழக்கில் இனவாத கூறு இல்லை; பள்ளிகளில் பாதுகாப்பு நிலை அதிகரிக்கப்பட்டுள்ளது: அமிரூடின் ஷாரி
பெட்டாலிங்ஜெயா:
பண்டார் உத்தாமாவில் மாணவி கொலை வழக்கில் இனவாத கூறுகள் எதுவும் இல்லை.
சிலாங்கூர் மந்திரி புசார் அமிரூடின் ஷாரி இதனை கூறினார்.
இன்று காலை பெட்டாலிங் ஜெயாவின் பண்டார் உத்தாமாவில் உள்ள ஒரு பள்ளியில் ஒரு பெண் மாணவி குத்திக் கொல்லப்பட்ட துயர சம்பவம் நடந்தது.
இதை தொடர்ந்து, சிலாங்கூர் அரசாங்கம் மாநிலத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகளிலும் பாதுகாப்பு நிலைகளை மேம்படுத்துவதற்கான முயற்சிகளுக்கு முன்னுரிமை அளிக்கும்.
இந்த வழக்கு இனவாத ரீதியாக தொடர்புடையது அல்ல.
மேலும் பள்ளி பாதுகாப்பு நிலை குறித்து சிலாங்கூர் காவல்துறைத் தலைவர் டத்தோ ஷாசாலி கஹாரைத் தொடர்பு கொண்டதாக அவர் கூறினார்.
ஒரு மகளையும் கொண்ட ஒரு தந்தையாக, பாதிக்கப்பட்டவரின் பெற்றோர் எதிர்கொள்ளும் சூழ்நிலையை என்னால் கற்பனை செய்து பார்க்க முடியவில்லை.
இந்த கொடூரமான துயரத்தை எதிர்கொள்ள அவர்களுக்கு வலிமையும் பாதுகாப்பும் கிடைக்கட்டும் என்று நான் எனது இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பை உடனடியாக மேம்படுத்துவதை உறுதி செய்வதற்காக, மாநில போலிஸ்படை, கல்வியமைச்சு, உள்ளூர் சமூகத்துடன் நெருக்கமாகச் செயல்படும் என்று அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
October 14, 2025, 6:27 pm
ஆலய வளாகத்தில் கோழி, ஆடு, மீன் விற்பனை: தெப்ராவ் கெஅடிலான் கண்டனம்
October 14, 2025, 6:25 pm
காதல் உணர்வை நிராகரித்ததால் கோபமடைந்த சந்தேக நபர் மாணவியை கத்தியால் குத்தியதாக கூறப்படுகிறது
October 14, 2025, 5:33 pm
குறைந்த மாணவர்கள் எண்ணிக்கையிலான தமிழ்ப்பள்ளிகள் பாதுகாக்கப்பட வேண்டும்: டத்தோ சிவக்குமார்
October 14, 2025, 4:09 pm
பள்ளி மாணவி கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் வேறு யாருக்கும் காயம் ஏற்படவில்லை: போலிஸ்
October 14, 2025, 4:06 pm
மக்கள் நலன் மையமாகக் கொண்ட பட்ஜெட்டுக்கான பரிந்துரைகளை பிரதமர் பரிசீலிக்க வேண்டும்.
October 14, 2025, 4:04 pm
காசோ ஹவானா திட்டத்தின் கீழ் தமிழ் ஊடகவியலாளர்கள் உட்பட 16 பேருக்கு நிதியுதவி
October 14, 2025, 4:03 pm
மடானி சமூக நல கிளப் அதிகாரப்பூர்வமாக திறப்பு விழா கண்டது: காஜாங் ஆசிரமத்திற்கு தீபாவளி அன்பளிப்பு
October 14, 2025, 1:00 pm