
செய்திகள் மலேசியா
மஇகா தலைவர்களை சந்தித்ததாக ஜாஹிட் கூறுவது ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது: டான்ஸ்ரீ விக்னேஸ்வரன்
கோலாலம்பூர்:
மஇகா தலைவர்களை சந்தித்ததாக டத்தோஸ்ரீ ஜாஹிட் ஹமிடி கூறுவது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது.
மஇகா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் இதனை கூறினார்.
கூட்டணியில் கட்சியின் எதிர்காலம் குறித்து விவாதிக்க கடந்த வாரத்தில் பலமுறை மஇகா தலைவர்களைச் சந்தித்ததாக தேசிய முன்னணி தலைவர் டத்தோஸ்ரீ ஜாஹிட் ஹமிடி கூறியுள்ளார்.
மஇகா தலைவர் என்ற முறையில் நான் அம்னோ தலைவரான ஜாஹிட்டை கடைசியாக இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு சந்தித்தேன்.
மேலும் மூன்று மாதங்களுக்கு முன்பு, அவர் ஒரு தேசிய ஒற்றுமைக் கூட்டத்தில் கலந்து கொண்டபோது, நான் அவரைச் சந்தித்தேன்.
மஇகா கூட்டணியை விட்டு வெளியேறி தேசியக் கூட்டணியில் சேர திட்டமிட்டுள்ளதாக வதந்திகள் பரவியதைத் தொடர்ந்து, தேசிய முன்னணிக்குள் கட்சியின் நிலைப்பாடு குறித்து விவாதிக்க ஜாஹிட்டை ஒருபோதும் நான் சந்தித்ததில்லை.
இருப்பினும் மசீச குறித்து என்னால் எதுவும் பேச முடியாது.
ஆனால் கடந்த வியாழக்கிழமை நடைபெறவிருந்த மஇகா, ஜாஹிட் இடையேயான சந்திப்பு எதிர்பாராத சூழ்நிலைகளால் ஒத்திவைக்கப்பட்டது என்று அவர் மேலும் கூறினார்.
எனவே, அவரது கூற்று எனக்கு மிகவும் ஆச்சரியமாக இருந்தது.
அவர் யாரைச் சந்தித்ததாக சொன்னார் என்று எனக்குத் தெரியவில்லை.
எங்கள் பங்கிற்கு, எந்தவொரு விவாதமும் கட்சியின் உயர்மட்டத் தலைமையுடன் செய்யப்பட வேண்டும் என்று டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
October 13, 2025, 10:44 pm
6,000 மாணவர்கள் இன்ஃப்ளூயன்ஸாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்: பல பள்ளிகள் மூடப்பட்டுள்ளன
October 13, 2025, 10:34 pm
தமிழ்நாடு அரசு வழங்கும் வெளிநாடுவாழ் தமிழர்களுக்கான NRT நலத்திட்டங்கள் குறித்த விழிப்புணர்வு முகாம் 2025
October 13, 2025, 5:50 pm
பிரதமருடன் எந்த பிரச்சினையும் இல்லை; தேமு தலைவருடன் தான் எங்களுக்கு பிரச்சினை: டான்ஸ்ரீ விக்னேஸ்வரன்
October 13, 2025, 5:04 pm
இந்தியர்களுக்கு நல்லது செய்தால், அது எந்த அரசாங்கமாக இருந்தாலும் மஇகா ஆதரிக்கும்: டான்ஸ்ரீ விக்னேஸ்வரன்
October 13, 2025, 4:10 pm
மலாக்கா பாலியல் வன்கொடுமை வழக்கில் தொடர்புடைய 4 சந்தேக நபர்கள் பள்ளியிலிருந்து நீக்கப்பட்டனர்
October 13, 2025, 4:09 pm
சாட்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்: நஜிப்பிற்கு எதிரான வழக்கு ஒத்திவைக்கப்பட்டது
October 13, 2025, 12:57 pm
பாலியல் வன்கொடுமை வழக்குகளில் சந்தேக நபர்கள் சிறார்களாக இருந்தாலும் தண்டிக்கப்படுவார்கள்: அசாலினா
October 13, 2025, 12:46 pm