
செய்திகள் மலேசியா
இந்தியர்களுக்கு நல்லது செய்தால், அது எந்த அரசாங்கமாக இருந்தாலும் மஇகா ஆதரிக்கும்: டான்ஸ்ரீ விக்னேஸ்வரன்
கோலாலம்பூர்:
இந்தியர்களுக்கு நல்லது செய்தால், அது எந்த அரசாங்கமாக இருந்தாலும்
மஇகா முழுமையாக ஆதரிக்கும்.
மஇகாவின் தேசியத் தலைவர் டான்ஸ்ரீ எஸ்.ஏ. விக்னேஸ்வரன் இதனை கூறினார்.
2026ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் கடந்த வெள்ளிக்கிழமை மக்களவையில் தாக்கல் செய்தார்.
இதில் குவாந்தான் ஜெராம் தோட்ட தமிழ்ப்பள்ளி புதிதாக கட்டப்படும் என அவர் அறிவித்தார்.
டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் பிரதமராக இருந்த போது பல புதிய தமிழ்ப்பள்ளிகளை கட்டினார்.
பல பள்ளிகளை புதுபித்ததுடன் நிதிகளை வாரி வழங்கினார்.
அதே போன்று தான் தற்போதைய பிரதமர் டத்தோஸ்ரீ அன்வாரும் செய்ய தொடங்கியுள்ளார்.
எது எப்படி இருந்தாலும் இந்த உதவிகள் நம் இந்திய சமுதாயத்தை தான் சென்றடைகிறது.
அதன் அடிப்படையில் இந்தியர்களுக்கு நல்லது செய்தால், அது எந்த அரசாங்கமாக இருந்தாலும் மஇகா ஆதரிக்கும்.
அது கிளந்தானில் பாஸ் அரசாங்கமாக இருந்தாலும் மஇகாநிச்சயம் ஆதரிக்கும்.
மஇகா தலைமையகத்தில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் இவ்வாறு கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
October 13, 2025, 10:44 pm
6,000 மாணவர்கள் இன்ஃப்ளூயன்ஸாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்: பல பள்ளிகள் மூடப்பட்டுள்ளன
October 13, 2025, 10:34 pm
தமிழ்நாடு அரசு வழங்கும் வெளிநாடுவாழ் தமிழர்களுக்கான NRT நலத்திட்டங்கள் குறித்த விழிப்புணர்வு முகாம் 2025
October 13, 2025, 5:50 pm
பிரதமருடன் எந்த பிரச்சினையும் இல்லை; தேமு தலைவருடன் தான் எங்களுக்கு பிரச்சினை: டான்ஸ்ரீ விக்னேஸ்வரன்
October 13, 2025, 4:10 pm
மலாக்கா பாலியல் வன்கொடுமை வழக்கில் தொடர்புடைய 4 சந்தேக நபர்கள் பள்ளியிலிருந்து நீக்கப்பட்டனர்
October 13, 2025, 4:09 pm
சாட்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்: நஜிப்பிற்கு எதிரான வழக்கு ஒத்திவைக்கப்பட்டது
October 13, 2025, 12:57 pm
பாலியல் வன்கொடுமை வழக்குகளில் சந்தேக நபர்கள் சிறார்களாக இருந்தாலும் தண்டிக்கப்படுவார்கள்: அசாலினா
October 13, 2025, 12:46 pm