செய்திகள் இந்தியா
வகுப்பறையில் நுழைந்து மாணவரைத் தாக்கிய சிறுத்தைக்குட்டி
அலிகர்:
மாணவர்கள் மட்டும்தான் வகுப்பறைக்குச் சென்று கல்வி கற்கலாமா?
நானும் செல்வேன் என்றது ஒரு சிறுத்தை.
இந்தியாவின் வடக்குப் பகுதியில் உள்ள அலிகார் (Aligarh) நகரின் பள்ளியொன்றில் நுழைந்த அந்தச் சிறுத்தை அங்குள்ள மாணவர் ஒருவரைத் தாக்கியது.
அவர் சிறு காயங்களுடன் தப்பியுள்ளார்.

வகுப்பறையில் ஒளிந்துகொண்டிருந்த சிறுத்தையைக் கண்டதும் வெளியே ஓடியதாக மாணவர் குறிப்பிட்டார்.
5 வயதாகும் அந்தச் சிறுத்தையை மயக்கமடையச் செய்து பிடிப்பதற்கு 11 மணி நேரமானதாக வனத்துறையினர் தெரிவித்தனர்.
அருகிலுள்ள காட்டிலிருந்து அந்தச் சிறுத்தை பள்ளிக்குச் சென்றிருக்கலாம் என வனத்துறை அதிகாரிகள் கூறினர்.
வனவிலங்குகளின் வசிப்பிடம் சுருங்கிக்கொண்டு இருப்பதால் அவை உணவுதேடி கிராமங்களுக்கும் நகரங்களுக்கும் செல்வதாகக் கூறப்படுகிறது.
இந்தியாவில் 12,000க்கும் மேற்பட்ட சிறுத்தைகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
தொடர்புடைய செய்திகள்
November 2, 2025, 1:29 pm
Indigo விமானத்தில் வெடிகுண்டுப்புரளி: சந்தேக நபர் தேடப்படுகிறார்
November 2, 2025, 11:55 am
இந்தியாவில் ஆலய கூட்ட நெரிசலில் சிக்கி 9 பேர் மரணம்
October 31, 2025, 9:13 pm
தெலங்கானா அமைச்சராக முன்னாள் கிரிக்கெட் வீரர் அசாருதீன் பதவியேற்றார்
October 31, 2025, 11:58 am
உங்கள் வங்கிக் கணக்கில் 'இதை' அப்டேட் செய்துவிட்டீர்களா?: நாளை முதல் இந்தியாவில் இது கட்டாயம்
October 29, 2025, 7:23 am
இந்தியாவில் எரிசக்தி உற்பத்தி அதிகரித்து வருவதால் 2030ஆம் ஆண்டுக்குள் நிலக்கரி மின்சாரம் உச்சமடையும்
October 27, 2025, 9:31 pm
5 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியாவிலிருந்து சீனாவுக்கு விமான சேவை
October 25, 2025, 9:18 pm
ஒன்றிய கல்வி திட்டத்தில் சேர்ந்ததால் கேரள ஆளும் கூட்டணியில் மோதல்
October 25, 2025, 9:07 pm
ம.பி.: தீபாவளி துப்பாக்கியால் பார்வை பாதிக்கப்பட்ட 100 பேர்
October 25, 2025, 8:39 pm
பெண் மருத்துவர் தற்கொலை: பாலியல் தொந்தரவு புகாரில் 2 போலீஸ் அதிகாரிகள் சஸ்பெண்ட்
October 24, 2025, 9:49 pm
