
செய்திகள் மலேசியா
ராஃபா எல்லையை மீண்டும் திறக்க முன்மொழிய எகிப்திய அதிபரை தொடர்பு கொள்வேன்: பிரதமர்
புக்கிட்ஜாலில்:
ராஃபா எல்லையை மீண்டும் திறக்க முன்மொழிய எகிப்திய அதிபரை தொடர்பு கொண்டு பேசுவேன்.
பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இதனை கூறினார்.
பாலஸ்தீன மக்களுக்கு மனிதாபிமான உதவிகளை வழங்குவதற்காக மலேசியா ஒரு புதிய உத்தியை வகுக்கும்.
அதில் எகிப்தின் ராஃபா வழியான தரைவழிப் பாதையும் அடங்கும்.
காசா மக்களுக்கு மனிதாபிமான உதவிகளை ஏற்றிச் சென்ற குளோபல் சுமுத் ஃப்ளோட்டிலா (ஜிஎஸ்எப்) கப்பல் இஸ்ரேலியப் படைகளால் தடுத்து நிறுத்தப்பட்டது.
இதை தொடர்ந்து, பாலஸ்தீன நிலத்தில் சியோனிச ஆட்சியின் சுவரை உடைக்கும் முயற்சியில் மலேசியா மேற்கொள்ளும் முயற்சிகளில் இந்த உத்தியும் அடங்கும்.
சுமுத் நுசந்தரா மனிதாபிமானப் பணியின் இரண்டாவது அலையை அடைய, அனைத்து இராஜதந்திர வழிகளையும் பயன்படுத்த வேண்டும்.
அதில் எகிப்திய அதிபர் அப்துல் ஃபத்தா அல்-சிசியைத் தொடர்பு கொண்டு பேச்சுவார்த்தை நடத்துவதும் அடங்கும்
இதனால் ராஃபா பாலஸ்தீனத்திற்கு நுழைவாயிலாக அனுமதிக்கப்படுவார் என்று பிரதமர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
October 9, 2025, 1:31 pm
2026ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் முன்மொழிவுகள் மாமன்னரிடம் சமர்ப்பிக்கப்பட்டது
October 9, 2025, 1:29 pm
மியான்மாருக்கு வெளியுறவு அமைச்சர் பயணம்: உயர் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துகிறார்
October 9, 2025, 1:28 pm
7 ஹரிமாவ் மலாயா வீரர்களின் குடியுரிமை; அனைத்து அரசியலமைப்பு நடைமுறைகளையும் பின்பற்றுகிறது: சைபுடின்
October 9, 2025, 11:07 am
பிரெஸ்மாவின் புதிய தலைவராக டத்தோ மோசின் தேர்வு; முஹிபுல்லா கான் துணைத் தலைவரானார்
October 9, 2025, 11:06 am
அம்னோ சொந்த அரசியல் உயிர்வாழ்வில் கவனம் செலுத்துவதால் தேசிய முன்னணியில் இருந்து மஇகா வெளியேறலாம்?
October 9, 2025, 11:04 am
தேசிய வரலாற்றைப் படைத்த 23 மலேசிய ஆர்வலர்களின் போராட்டம் பெருமையளிக்கிறது: பிரதமர்
October 8, 2025, 10:05 pm