செய்திகள் மலேசியா
தீபாவளியை முன்னிட்டு வழங்கப்பட்ட உதவிப் பொருட்கள் துப்புரவுப் பணியாளர்களின் சுமையை குறைக்கும்: பாப்பா ராயுடு
ஷாஆலம்:
தீபாவளியை முன்னிட்டு வழங்கப்பட்ட உதவிப் பொருட்கள் துப்புரவுப் பணியாளர்களின் சுமையை குறைக்கும் என நான் நம்புகிறேன்.
சிலாங்கூர் மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் பாப்பாராயுடு இதனை கூறினார்.
தீபாவளி பெருநாளை முன்னிட்டு சிலாங்கூர் மாநில தலைமையகத்தில் வேலை செய்யும் இந்திய துப்புரவுப் பணியாளர்களுக்கு உதவிப் பொருட்களுடம் அன்பளிப்புகள் வழங்கப்பட்டது.
இன்று காலை சிலாங்கூர் மாநில தலைமையகத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் 25 பணியாளர்கள் இதனை பெற்றுக் கொண்டனர்.
மாநில அரசின் முயற்சியால் முன்னெடுக்கப்பட்ட இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
தீபாவளி போன்ற பண்டிகை காலங்களில் இதுபோன்ற உதவிகள் அப்பணியாளர்களின் சுமையை ஓரளவு குறைக்கும் என நான் நம்புகிறேன்.
அதே வேளையில் இதுபோன்ற முயற்சிகள் வரும் காலங்களிலும் தொடரும் என்று பாப்பாராயுடு கூறினார்.
முன்னதாக உதவிகளை பெற்றுக் கொண்ட பணியாளர்கள் பாப்பாராயுடு உட்பட அனைத்து தரப்பினருக்கும் நன்றியை தெரிவித்து கொண்டனர்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
April 20, 2026, 10:59 pm
பூச்சோங் கெஅடிலான் தொகுதி கூட்டத்தில் கூச்சல், குழப்பம்; எந்தப் பிரச்சினையும் இல்லை: தலைவர்
April 20, 2026, 10:58 pm
கனமழையால் கேமரன்மலையில் திடீர் வெள்ளம்
April 20, 2026, 6:01 pm
டிக் டாக்கில் உதவி வழங்குவதாகக் கூறப்படுவதை பகாங் அரண்மனை மறுத்தது
April 20, 2026, 6:00 pm
இந்திராகாந்தி வழக்கு: புதிய ஆதாரங்களை நிராகரித்து, நீதிமன்றம் ஆச்சரியமூட்டும் தீர்ப்பை வழங்கியது
April 20, 2026, 5:36 pm
சொந்த ஊரில் எங்களுக்கு வாடகை.. அவர்களுக்கு இலவசமா?
April 20, 2026, 5:10 pm
புக்கிட் ஜாலிலில் சிக்கிய தென்கொரியாக் குற்றவாளி : குடிநுழைவுச் சட்டத்தின் கீழ் விசாரணை தொடக்கம்
April 20, 2026, 5:04 pm
நிர்வாணமாகச் சுற்றித் திரிந்த நபர் மீட்பு
April 20, 2026, 5:03 pm
