செய்திகள் மலேசியா
கமுனிங் உத்தாமா ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலய திருப்பணியை பூர்த்தி செய்ய மடானி அரசாங்கத்தின் மானியம் வழங்கப்பட்டது: குணராஜ்
கிள்ளான்:
கமுனிங் உத்தாமா ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலய திருப்பணியை பூர்த்தி செய்ய மடானி அரசாங்கத்தின் மானியம் வழங்கப்பட்டது.
செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் குணராஜ் ஜோர்ஜ் இதனை தெரிவித்தார்.
நீண்ட காலமாக முழுமை பெறாமலிருக்கும் ஆலயத்தின் திருப்பணிகளை பூர்த்தி செய்து கும்பாபிஷேகத்தை நடத்துவதற்கு உதவும் நோக்கில் இந்த மானியம் வழங்கப்பட்டது.
உள்ளூர் மக்களின் தேவைகளை அறிந்து அவற்றை நிறைவேற்றுவதில் அக்கறை காட்டி வரும் மடானி அரசுக்கு நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
மக்களிடையே நல்லிணக்கத்தை ஆதரிப்பதிலும், ஒற்றுமையை வலுப்படுத்துவதிலும் அனைத்து வழிபாட்டுத் தலங்களும் உரிய கவனம் செலுத்தப்படுவதை உறுதி செய்வதிலும் அரசாங்கத்தின் உறுதிப்பாட்டை இந்த நடவடிக்கை நிரூபிக்கிறது என்று குணராஜ் கூறினார்.
முன்னதாக அண்மையில் ஆலயத்தில் நடைபெற்ற சிறப்பு நிகழ்வில் கெஅடிலான் கட்சியின் கோத்தா ராஜா தொகுதி தலைவர் டாக்டர் குணராஜ் கலந்து கொண்டு இந்த மானியத்தை ஆலயப் பொறுப்பாளர்களிடம் ஒப்படைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
December 7, 2025, 5:22 pm
உயர் கல்வி கனவை பெர்டானா பல்கலைக்கழகம் நனவாக்குகிறது: மாணவார்கள் பெருமிதம்
December 7, 2025, 2:15 pm
பேரா அவுலோங் ஸ்ரீ மகா சிவாலயத்தின் மகா கும்பாபிஷேக விழா: விமரிசையாக நடைபெற்றது
December 7, 2025, 1:44 pm
ஆசிய கல்வி விருது விழாவில் சிறந்த மருத்துவ கல்வி சேவைக்கான விருதை பியோன்ட் மலேசியா வென்றது
December 7, 2025, 1:25 pm
சிரம்பான் சென்ட்ரல் டிரான்சிட் ஓரியண்டட் டெவலப்மென்ட் (TOD) அடிக்கல் நாட்டு விழா
December 7, 2025, 1:07 pm
நம்பிக்கை நட்சத்திர விருது விழாவில் விளையாட்டுத் துறையில் சாதித்தவர்களுக்கு அங்கீகாரம்
December 7, 2025, 11:41 am
