செய்திகள் மலேசியா
பெர்னாஸின் சூரியன் திட்டம்; இந்திய வர்த்தகர்களுக்காக அறிவிக்கப்பட்ட முதல் மகத்தான திட்டமாகும்: ஹேமலா
கோலாலம்பூர்:
பெர்னாஸின் சூரியன் திட்டம் இந்திய வர்த்தகர்களுக்காக வரலாற்றில் அறிவிக்கப்பட்ட முதல் மகத்தான திட்டமாகும்.
மைக்கியின் மகளிர் பிரிவுத் தலைவர் ஹேமலா சிவம் இதனை கூறினார்.
இந்திய சமூகத்தில் அதிகமான தொழில் முனைவோரை உருவாக்குவதுடன் இந்திய சமூக உரிமையாளர்களாக்கும் முயற்சியான சூரியன் திட்டத்தை தொழில் முனைவோர் மேம்பாட்டு கூட்டுறவு துணையமைச்சர் டத்தோஸ்ரீ ரமணன் இன்று அறிவித்தார்.
டத்தோஸ்ரீ ரமணன் ஏறகெனவே பேங்க் ரக்யாட்டின் கீழ் பிரிவ்-ஐ, தெக்குன் நேஷனல் கீழ் ஸ்பூமி கோஸ் பிக், எஸ்எம்இ கோர்ப்பின் கீழ் ஐபேப், அமானா இக்தியாரின் கீழ் பெண் திட்டம், எஸ்எம்இ வங்கியின் கீழ் வணிகம் திட்டம் போன்ற பல்வேறு திட்டங்களை அறிவித்தார்.
இந்த திட்டங்கள் அனைத்தும் இந்திய சமூக தொழில்முனைவோருக்கு மொத்தம் 357 மில்லியன ரிங்கிட் ஒதுக்கியுள்ளன
மேலும் 12,000க்கும் மேற்பட்ட இந்திய தொழில்முனைவோருக்கு இத்திட்டங்கள் பயனளித்துள்ளன.
இந்நிலையில் சூரியன் திட்டம் இந்திய வர்த்தகர்களுக்கு மேலும் புத்துணர்ச்சியை வழங்கியுள்ளது.
குறிப்பாம இந்த திட்டம் நாடு முழுவதும் 1,000 பங்கேற்பாளர்களை இலக்காகக் கொண்டுள்ளது.
இதில் 20 வருங்கால பிரான்சாய்ஸ் வர்த்தகர்கள், 100 வருங்கால உரிமையாளர்கள், 400 சிறு தொழில்முனைவோர், 500 வேலை வாய்ப்பு பங்கேற்பாளர்கள் ஆகியோர் அடங்குவர்.
இதற்காக 54.5 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கப்பட்டுள்ளது.
மலேசிய வரலாற்றில் முதல் முறையாக இத்திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதை அறிமுகம் செய்த டத்தோஸ்ரீ ரமணனுக்கு எனது நன்றியைத் தெரிவித்து கொள்கிறேன்.
அதே வேளையில் இந்திய சமுகமும் இந்த வாய்ப்பை முழுமையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என ஹேமலா வலியுறுத்தினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
November 13, 2025, 5:50 pm
ஜொகூர் மாநில ஊடகவியலாளர்களுக்கு 1,000 ரிங்கிட் சிறப்பு ஊக்கத் தொகை: மந்திரி புசார் அறிவிப்பு
November 13, 2025, 5:45 pm
சபாவின் 40% உரிமைகள் கோரிக்கை மீதான ஏஜிசியின் முடிவுக்கு மாநில தேர்தல் காரணமாக இல்லை: பிரதமர்
November 13, 2025, 11:15 am
ஆர்டிஎஸ் இயங்கும் போது ஏற்படும் போக்குவரத்து சிக்கல்கள் கவலையளிக்கிறது: துங்கு இஸ்மாயில்
November 13, 2025, 11:14 am
ஜாலான் மஸ்ஜித் இந்தியாவில் வணிக வளாகங்கள் வழக்கம் போல் இயங்குகின்றன
November 13, 2025, 11:02 am
நவம்பர் 22 அணிவகுப்பில் தெங்கு மைமுன் பங்கேற்க வேண்டும்: இந்திரா காந்தி அழைப்பு
November 13, 2025, 8:37 am
சபா வருவாய் விவகாரத்தை எதிர்த்து மேல்முறையீடு செய்யாத முடிவை தேசிய முன்னணி வரவேற்கிறது: ஜாஹித்
November 12, 2025, 9:42 pm
ஆமாவா... உங்களுக்கு யார் சொன்னது?: பிரதமர்
November 12, 2025, 9:39 pm
இந்த ஆண்டு 55 மலேசியர்கள் போதைப்பொருள் கழுதைகள் என வெளிநாடுகளில் கைது செய்யப்பட்டனர்: ஹுசைன் ஒமார் கான்
November 12, 2025, 9:38 pm
வளர்ச்சி துரோகமாக மாறும்போது சிலாங்கூர் அரசின் வாக்குறுதிகள் நிறைவேறாமல் போகிறது: சார்லஸ் சந்தியாகோ
November 12, 2025, 9:36 pm
