செய்திகள் இந்தியா
வெளிநாட்டுக்கு செல்லாத இந்திய மருத்துவருக்கு ஒமிக்ரான் பாதிப்பு
பெங்களூரு:
இந்தியாவிலேயே கர்நாடகத்தில் ஒமைக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்ட இருவரில் ஒருவர் வெளிநாட் டுக்கே செல்லாத உள்ளூர்வாசி மருத்துவர் என்பது தெரியவந்துள்ளது. இதனால் பெங்களூருவில் ஒமிக்ரான் பாதிப்பு பலருக்கு பரவி இருக்கக் கூடும் என்று அஞ்சப்படுகிறது.
மருத்துவருக்கு எப்படி இந்த பாதிப்பு ஏற்பட்டிருக்கும் என்பது குறித்து அதிகாரிகள் விரிவாக ஆய்வு நடத்தி வருகிறார்கள்.
மேலும், பாதிக்கப்பட்ட இருவரும் இரு டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள்.

இதுதொடர்பாக பெங்களூரு மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், 'ஒமிக்ரான் பாதிப்புக்கு உள்ளான முதல் நப ரான 66 வயதுடைய தென் ஆப்பிரிக்க நாட்டவர் கடந்த மாதம் 20-ஆம் தேதி பெங்களூரு வந்தார். அவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதால் ஹோட்டலில் தனிமைப்படுத்தப்பட்டார்.
பின்னர், மறுபரிசோ தனையில் கொரோனா இல்லை என்று முடிவு வந்ததால் நவம்பர் 27இல் துபாய்க்கு சென்றார். அவருடன் முதல்நிலை தொடர்பில் இருந்த 24 பேர், இரண்டாம் நிலை தொடர்பில் இருந்த 240 பேர் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.
46 வயதான இரண்டாவது நபரான பெங்களூரு மருத்துவருக்கு நவம்பர் 22-ஆம் தேதி கொரோனா உறுதி செய்யப்பட்டது. முதலில் வீட்டுத் தனிமையில் இருந்த அவர் பின்னர் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.
தற்போது அவர் ஒமைக்ரான் தீநுண்மியால் பாதிக்கப்பட்டுள்ளது உறுதியாகியுள்ளது. அவ ருடன் முதல்நிலை தொடர்பில் இருந்த 13 பேரில் மூவருக்கும், இரண்டாம் நிலை தொடர்பில் இருந்த 205 பேரில் இருவருக்கும் கரோனா உறுதி செய்யப்பட்டுள் ளது என்றனர்.
தொடர்புடைய செய்திகள்
October 31, 2025, 9:13 pm
தெலங்கானா அமைச்சராக முன்னாள் கிரிக்கெட் வீரர் அசாருதீன் பதவியேற்றார்
October 31, 2025, 11:58 am
உங்கள் வங்கிக் கணக்கில் 'இதை' அப்டேட் செய்துவிட்டீர்களா?: நாளை முதல் இந்தியாவில் இது கட்டாயம்
October 29, 2025, 7:23 am
இந்தியாவில் எரிசக்தி உற்பத்தி அதிகரித்து வருவதால் 2030ஆம் ஆண்டுக்குள் நிலக்கரி மின்சாரம் உச்சமடையும்
October 27, 2025, 9:31 pm
5 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியாவிலிருந்து சீனாவுக்கு விமான சேவை
October 25, 2025, 9:18 pm
ஒன்றிய கல்வி திட்டத்தில் சேர்ந்ததால் கேரள ஆளும் கூட்டணியில் மோதல்
October 25, 2025, 9:07 pm
ம.பி.: தீபாவளி துப்பாக்கியால் பார்வை பாதிக்கப்பட்ட 100 பேர்
October 25, 2025, 8:39 pm
பெண் மருத்துவர் தற்கொலை: பாலியல் தொந்தரவு புகாரில் 2 போலீஸ் அதிகாரிகள் சஸ்பெண்ட்
October 24, 2025, 9:49 pm
இந்தியா கூட்டணி முதல்வர் வேட்பாளர் தேஜஸ்வி யாதவ்
October 24, 2025, 5:04 pm
அக்.27ஆம் தேதி உருவாக உள்ள புயலுக்கு மோன்தா என பெயர் சூட்டபட்டது: இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு
October 24, 2025, 1:04 pm
