நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

இந்தியாவின் வட மாநிலங்களில் கனமழை, நிலச்சரிவு காரணமாக 14 பேர் உயிரிழப்பு

டார்ஜிலிங்: 

மேற்கு வங்க மாநிலம் டார்ஜிலிங்கில் கனமழை, நிலச்சரிவு காரணமாக 14 பேர் உயிரிழந்தனர். 

கனமழை காரணமாக சிலிகுரி - டார்ஜிலிங் நெடுஞ்சாலையில் உள்ள தூதியா இரும்புப் பாலம் உடைந்து விழுந்தது. 

தூதியா ஆற்றில் கட்டப்பட்ட இரும்புப் பாலம் உடைந்து விழுந்ததில் 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 

தூதியா ஆற்றின் கரையோரம் இருந்த 20க்கும் மேற்பட்ட வீடுகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன. 

ஜல்பைகுரி, சிலிகுரி, கூபிகார், கலிம்பாங், அலிபுர்தார் பகுதிகளில் பலத்த மழையால் பலர் உயிரிழந்தனர்.

- ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset