நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

இஸ்ரேலுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் இரண்டாவது நாளாகத் தொடர்கின்றன

கோலாலம்பூர்:

இஸ்ரேலுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் இரண்டாவது நாளாகத் தொடர்கின்றன.

தலைநகரில் இன்று காலை முதல் கடுமையான மழை பெய்து வருகிறது.

இந்த மழையையும் பொருட்படுத்தாமல் இஸ்ரேல் எதிர்ப்பு பேரணியில பங்கேற்பாளர்கள் தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்த வீதிகளில் இறங்கியுள்ளனர்.

வெள்ளிக்கிழமை தொழுகைக்குப் பிறகு தாபோங் ஹாஜி கட்டிடத்தின் முன் தொடங்கி, பல பிரமுகர்கள் உரைகளை நிகழ்த்தினர்.

பின்னர் பேரணியில் பங்கேற்றவர்கள் மழைக்காலத்தையும் பொருட்படுத்தாமல் அமெரிக்க தூதரகத்திற்கு பெருமளவில் பேரணியாகச் சென்றனர்.

அவர்கள் இஸ்ரேலிய எதிர்ப்பு கோஷங்களை எழுப்பியபடி பேரணி நடத்தினர்.

இன்றைய பேரணியை மாப்பிம் ஏற்பாடு செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset