நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

சிக்கலில் உள்ள உம்ரா பயணிகள்: பயண நிறுவனங்கள் வீடு திரும்பும் பொறுப்பை ஏற்க வேண்டும்: வெளியுறவு அமைச்சர் ஹஸன்

புத்ராஜயா: 

ஆசியப் பெசிபிக் பிராந்தியத்தில் நிகழ்ந்த மோதல்களின் பின்னர் கடுமையான சிக்கலில் தவிக்கும் உம்ரா பயணிகள் தங்களுக்கான பயணச் சேவைகளை வழங்கும் நிறுவனங்களிடம் தங்கள் பொறுப்பை ஏற்று, தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கோர வேண்டும்.

சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் தங்களது பயணிகளை வீடு திரும்பச் செய்யும் பொறுப்பை ஏற்க வேண்டும், இதில் பயண தளங்கள் மூலம் விமானக் போக்குவரத்துகளை மீண்டும் திட்டமிடுவது உள்ளிட்ட சேவைகள் அடங்கும் என வெளியுறவு அமைச்சர் டத்தோ ஸ்ரீ முஹம்மத் ஹசன் தெரிவித்தார்.

 “அனைத்து பயணிகள், குறிப்பாக மத்திய இடைநிலை விமான நிலையங்களில் சிக்கியவர்களின் வீடு திரும்பும் நடவடிக்கைகளுக்கு அரசாங்கம் முன்னுரிமை வழங்குகிறது. 

பயணிகள் எவ்வாறு பயணித்தனரோ அதே பயண நிறுவனங்கள் அவர்களை வீடு திரும்பச் செய்யவேண்டும். அரசு மட்டுமே பொறுப்பேற்கக் கூடாது,” என்று அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், சில ஆசியப் பசிபிக் நாடுகளில் வானூர்தி துறைகள் மூடப்பட்ட காரணத்தால் பாதிக்கப்பட்ட மலேசியர்கள் மூன்று பிரிவுகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளனர்.

முதலாவது பிரிவு, துபாய், டோஹா, அபுதாபி, பஹ்ரைன் போன்ற இடைநிலை விமான நிலையங்களில் சிக்கிய பயணிகள். அரசு முதலில் இந்த பிரிவில் உள்ளவர்களை கையாளும்.

இரண்டாவது பிரிவு தனிப்பட்ட முறையில் உம்ரா செய்யும் மலேசியர்கள்.

மூன்றாவது பிரிவு அந்த நாடுகளில் வசிக்கும், வேலை செய்யும் அல்லது குடியிருப்பில் உள்ள மலேசியர்களாவர்.

தனிப்பட்ட முறையில் பயணம் செய்த பயணிகள் சிக்கியிருந்தால், அரசு தங்களது வீடு திரும்பும் நடவடிக்கைகளை உதவி செய்யும் பொறுப்பை ஏற்கிறது என்றார் அவர். 

இந்தப் பயணிகள் தற்காலிகமாக தாபோங் ஹாஜி வசதிகளில் தங்கவைத்துக் கொள்ளப்பட்டு, உணவு, குடிநீர் வழங்கப்பட்டு, பின்னர் விமான பயணங்கள் ஏற்பாடு செய்யப்படும் என்று அமைச்சர் கூறினார்.

-சங்கீர்த்தனா 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset