நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் தமிழ் தொடர்புகள்

By
|
பகிர்

ஆயுத பூஜையை முன்னிட்டு சென்னையில் எல்லா கடைகளிலும் விற்பனை மும்முரம்

சென்னை: 

ஆ​யுத​பூஜையை முன்​னிட்டு சென்​னை​யில் நேற்று பூஜைப் பொருட்​களை வாங்​கு​வதற்​காக திரண்ட பொது​மக்​களால் கடைவீ​தி​கள் மற்​றும் முக்​கிய சந்​தைகள் களை​கட்​டின. 

இன்று ஆயுத​பூஜை கோலாகல​மாக கொண்டாடப்படுகிறது. இதையொட்​டி, சென்னை கோ​யம்​பேடு, பாரி​முனை, தியாக​ராய நகர், பெரம்​பூர், புரசை​வாக்​கம், வண்ணாரப்​பேட்டை உள்​ளிட்ட முக்​கிய சந்​தைகள் காலை முதலே பரபரப்​பாக காணப்​பட்​டது.

குறிப்​பாக, ஆயுத பூஜையை முன்​னிட்டு கோயம்​பேட்​டில் அக்​.5-ம் தேதி வரை சிறப்பு சந்தை நடை​பெறுகிறது. இதில் பொறி, கடலை, வாழைப்​பழம், இலை, தேங்​காய், பழங்​கள் உள்​ளிட்ட பூஜை பொருட்​களை விற்​பனை செய்ய தனி​யாக ஓர் இடம் ஒதுக்​கப்​பட்​டுள்​ளது. இங்​கும் அமோக​மாக விற்​பனை நடை​பெற்​றது.

அதே​நேரம், பொருட்​கள் மற்​றும் பூக்​களின் விலை வழக்​கத்தைவிட அதி​கரித்​திருந்​தது. அதன்​படி, ஒரு கிலோ மல்லி ரூ.600-ல் இருந்து 800-ஆக​வும், முல்லை 500-ல் இருந்து ரூ.700-ஆக​வும், கனகாம்​பரம் 400-ல் இருந்து 800-ஆக​வும், அரளி பூ ரூ.200-ல் இருந்து 350-ஆக​வும், சாமந்தி ரூ.100-ல் இருந்து 180-ஆக​வும், சம்​மங்கி ரூ.100-ல் இருந்து 200-ஆக​வும் உயர்ந்து விற்​பனை​யானது.

குறிப்​பாக, மாலை நேரங்​களில் இறுதி நேர வியா​பாரம் களை​கட்​டியது. இவ்​வாறு பொருட்​களை வாங்​கிச் செல்ல ஏராள​மான வியா​பாரி​கள், பொது​மக்​கள் வந்த நிலை​யில், அலு​வல​கம் முடிந்து வீடு செல்​வோர், பண்​டிகைக்​காக ஊர்​களுக்​குச் செல்​வோர் என அணிவகுத்​த​தால் முக்​கிய சாலைகளி​லும், புறநகர் பிர​தான சாலைகளி​லும் போக்​கு​வரத்து நெரிசல் ஏற்​பட்​டது. போக்​கு​வரத்து காவலர்​கள் கூடு​தலாக பணி​யமர்த்​தப்​பட்​டு, நெரிசலை சீர் செய்​தனர்.

சிறப்பு பேருந்துகள் இயக்கம்: கிளாம்​பாக்​கம், கோ​யம்​பேடு, மாதவரம் உள்​ளிட்ட பேருந்து நிலை​யங்​களுக்கு வந்​தவர்​களுக்​காக சிறப்பு பேருந்​துகள் ஏற்​பாடு செய்​யப்​பட்​டிருந்​தன. வாரத்​தின் இடை​யில் ஆயுத​பூஜை வந்​த​போதும், அதைத் தொடர்ந்து காந்தி ஜெயந்தி என தொடர் விடு​முறை இருப்​ப​தால் பலரும் ஊர்​களுக்கு பயணிக்க திட்​ட​மிட்​ட​தால் காலை முதலே மக்​கள் கூட்டம் அலைமோ​தி​யது. 

முன்​ன​தாக, கிளாம்​பாக்​கம் பேருந்து நிலை​யத்​தில் நேற்று முன்​தினம் ஆய்வு செய்த போக்​கு​வரத்​துத் துறை அமைச்​சர் சா.சி.சிவசங்​கர், பேருந்​துகளை பாது​காப்​பாக இயக்​கு​மாறு ஓட்​டுநர், நடத்​துநர்​களுக்கு அறி​வுறுத்​தல் வழங்​கியதோடு, சிறப்பு பேருந்து இயக்​கம் குறித்து பயணி​களிட​மும் கேட்​டறிந்​தார். மெட்​ரோ ரயில்​களி​லும் நேற்று கூட்​டம் அதி​கரித்து காணப்​பட்​டது.

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset