நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் தமிழ் தொடர்புகள்

By
|
பகிர்

கரூர் கூட்ட நெரிசல்: அல்லு அர்ஜுன் பாணியில் த.வெ.க. தலைவர் விஜய் கைது ஆவாரா?

சென்னை:

கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தை தொடர்ந்து அல்லு அர்ஜுன் பாணியில் த.வெ.க. தலைவர் விஜய் கைது ஆவாரா? என்ற கேள்விகள் தமிழகத்தில் எழுந்துள்ளது.

கரூரில் வேலுசாமிபுரம் பகுதியில் தவெக தலைவர் விஜய் பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 8 குழந்தைகள் உள்பட 39 பேர் உயிரிழந்தனர்.

தமிழ்நாட்டையே உலுக்கி உள்ள இச்சம்பவத்திற்கு அரசியல் தலைவர்கள், நடிகர்கள் என பலரும் இரங்கலும் தங்களது கண்டனங்களையும் தெரிவித்து வருகின்றனர்.

 இந்த விவகாரத்தில் விஜயை கைது செய்ய வேண்டும் என்று பலர் வலியுறுத்தி வருகின்றனர். 

இதனால் விஜய் செய்யப்படுவாரா? என்று கேள்வி எழுந்துள்ளது.

தெலுங்கானாவில் புஷ்பா 2 பட வெளியீட்டின்போது ஏற்பட்ட கூட்டநெரிசலில் சிக்கி ரேவதி என்ற 39 வயது பெண் உயிரிழந்தது தொடர்பாக அல்லு அர்ஜுன் கைது செய்யப்பட்டது நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

அதே போல் தமிழ்நாட்டிலும் விஜய் செய்யப்படுவாரா? என்று அவரது ரசிகர்களும் த.வெ.க. தொண்டர்களும் அச்சம் அடைந்துள்ளனர்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset