செய்திகள் உலகம்
சிங்கப்பூர் அல் இஸ்டிகமா பள்ளிவாசலில் பன்றி இறைச்சி?: உள்துறை அமைச்சர் சண்முகம் கண்டனம்
சிங்கப்பூர்:
சிராங்கூன் நார்த்தில் (Serangoon North) உள்ள அல் இஸ்டிகமா (Al-Istiqamah) பள்ளிவாசலில் சந்தேகத்துக்குரிய பொட்டலம் நேற்று கண்டுபிடிக்கப்பட்டிருந்தது.
அது ஒரு தகாத செயல்; வழிபாட்டுத் தலங்களைக் குறிவைப்பதைப் பொறுத்துக்கொள்ள முடியாது என்று உள்துறை அமைச்சர் கா சண்முகம் கண்டித்துள்ளார்.
இத்தகைய செயல்களைப் புரிவோர் நெருப்புடன் விளையாடுகிறார்கள் என அவர் சொன்னார்.
பள்ளிவாசலுக்குச் சந்தேகத்துக்குரிய பொட்டலம் அனுப்பப்பட்டது தனிப்பட்ட சம்பவம் அல்ல என்றும் அவர் சொன்னார்.
இதுபோன்ற மேலும் சில சம்பவங்களைக் காவல்துறை விசாரித்து வருகிறது என்றார் சண்முகம்.
அல் இஸ்டிகமா பள்ளிவாசலுக்கு வருகை தந்த அமைச்சர் செய்தியாளர்களிடம் பேசினார்.
அந்தப் பள்ளிவாசலுக்கு அனுப்பப்பட்ட பொட்டலத்தில் மாமிசம் இருந்ததாகவும் அது சோதனைக்கு அனுப்பப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.
அது பெரும்பாலும் பன்றியாக இருக்கும் என்று கூறப்படுகிறது.
சிங்கப்பூரில் இத்தகைய சம்பவங்கள் நடப்பதை ஒரு போதும் ஏற்றுக்கொள்ள முடியாது என்றார் அவர்.
இதுபோன்ற சம்பவம் இங்கு நடப்பது முதல் முறையல்ல.
"சிங்கப்பூரில் எல்லோரும் அவர்களுடைய மதத்தைப் பேணிக் காக்க முடியும். மதம் சார்ந்த முறையில் அவர்கள் வழிபட முடியும். அதற்குப் பாதுகாப்பு எப்போதும் அளிக்கப்படும். இதுபோன்ற தகாத செயல்கள் தண்டிக்கப்படும்," என்றார் சண்முகம்.
- ரோசித் அலி
தொடர்புடைய செய்திகள்
December 12, 2025, 12:54 pm
பாகிஸ்தான் உளவுப்பிரிவுத் தலைவருக்கு 14 ஆண்டுச் சிறை
December 12, 2025, 11:13 am
கிறிஸ்துமஸை முன்னிட்டு சாக்லெட்டின் விலை அதிகரிப்பு
December 12, 2025, 9:47 am
பொதுத் தேர்தலுக்கு வழிவிடும் நோக்கில் தாய்லாந்து பிரதமர் நாடாளுமன்றத்தை கலைத்தார்
December 11, 2025, 10:29 am
நியூயார்க்கில் வீடில்லா மக்களுக்கு 30 லட்சம் அமெரிக்க டாலர்கள் வழங்கி சோஹ்ரான் மம்தானி உதவி
December 10, 2025, 2:07 pm
16 வயதுக்குட்பட்டவர்களுக்கான சமூக ஊடக தடையை ஆஸ்திரேலியா முதல் நாடாக அமல்படுத்தியது
December 7, 2025, 11:26 pm
ஆஸ்திரேலியாவில் 70 இடங்களில் காட்டுத்தீ: 350,000 பேர் பாதிப்பு
December 2, 2025, 8:19 am
சமூகச் சேவைக்காக ராயல் கிங்ஸ் குழுமத்தின் கேரி ஹாரிசுக்கு இந்தியத் தூதரக உயர் விருது
November 30, 2025, 8:34 pm
சிங்கப்பூரில் பள்ளி நேரங்களில் கைத்தொலைப்பேசிகளைப் பயன்படுத்த மாணவர்களுக்குத் தடை
November 29, 2025, 11:18 pm
