செய்திகள் உலகம்
பாலஸ்தீனத்தை அங்கீகரித்த பிரான்ஸ் அதிபர் அமெரிக்க சாலையில் காக்க வைக்கப்பட்டார்
நியூயார்க்:
ஐ.நா. பொதுச் சபையில் பாலஸ்தீனத்தை தனிநாடாக அங்கீகரித்த பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் அமெரிக்க சாலையில் அரை மணி காக்க வைக்கப்பட்டார்.
அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் வாகன அணிவகுப்பிற்காக பிரான்ஸ் அதிபர் மேக்ரானின் கார் தடுத்து நிறுத்தப்பட்டது.
காரிலிருந்து இறங்கி டிரம்ப்பிற்கு தொலைபேசியில் அழைத்து,
"நீங்கள் எப்படி இருக்கிறீர்கள்? என்ன நடந்தது என்று தெரியுமா? உங்களுக்காகத்தான் நான் இங்கு சாலையில் காத்துக் கொண்டிருக்கிறேன், ஏனென்றால் உங்களுக்காக சாலைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன" என்று சிரித்தவாறே கூறியுள்ளார்.
அப்போது, ஒரு காவல்துறை அதிகாரி, "மன்னிக்கவும் அமெரிக்க அதிபருக்காக அனைத்து சாலைகளும் அடைக்கப்பட்டுள்ளன" என்றார்.
பின்னர் நடந்தே தனது தூதரகத்துக்கு மேக்ரான் திரும்பினார்.
முன்னதாக, ஐ.நா. பொதுச் சபையில் பேசிய மேக்ரான் பிரான்ஸ் பாலஸ்தீனத்தை ஒரு தனி நாடாக அதிகாரபூர்வமாக அங்கீகரிப்பதாக அறிவித்தார்.
இஸ்ரேலியர்களுக்கும் பாலஸ்தீனியர்களுக்கும் இடையிலான நீண்டகால மோதலை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும். காஸாவில் நடக்கும் போருக்கு எந்த நியாயமும் இல்லை என்றார்.
ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, கனடா, போர்ச்சுகலைத் தொடர்ந்து பாலஸ்தீனத்தை அங்கீகரிக்கும் நாடுகளின் வரிசையில் பிரான்ஸ் இணைந்துள்ளது.
மேக்ரான் நடந்து செல்லும் காட்சி உலகெங்கும் வைரலாகி வருகிறது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
December 12, 2025, 12:54 pm
பாகிஸ்தான் உளவுப்பிரிவுத் தலைவருக்கு 14 ஆண்டுச் சிறை
December 12, 2025, 11:13 am
கிறிஸ்துமஸை முன்னிட்டு சாக்லெட்டின் விலை அதிகரிப்பு
December 12, 2025, 9:47 am
பொதுத் தேர்தலுக்கு வழிவிடும் நோக்கில் தாய்லாந்து பிரதமர் நாடாளுமன்றத்தை கலைத்தார்
December 11, 2025, 10:29 am
நியூயார்க்கில் வீடில்லா மக்களுக்கு 30 லட்சம் அமெரிக்க டாலர்கள் வழங்கி சோஹ்ரான் மம்தானி உதவி
December 10, 2025, 2:07 pm
16 வயதுக்குட்பட்டவர்களுக்கான சமூக ஊடக தடையை ஆஸ்திரேலியா முதல் நாடாக அமல்படுத்தியது
December 7, 2025, 11:26 pm
ஆஸ்திரேலியாவில் 70 இடங்களில் காட்டுத்தீ: 350,000 பேர் பாதிப்பு
December 2, 2025, 8:19 am
சமூகச் சேவைக்காக ராயல் கிங்ஸ் குழுமத்தின் கேரி ஹாரிசுக்கு இந்தியத் தூதரக உயர் விருது
November 30, 2025, 8:34 pm
சிங்கப்பூரில் பள்ளி நேரங்களில் கைத்தொலைப்பேசிகளைப் பயன்படுத்த மாணவர்களுக்குத் தடை
November 29, 2025, 11:18 pm
