நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

இரண்டாம் உலகப் போரின் போது பயன்படுத்தப்பட்ட குண்டுகள்: ஹாங்காங்கில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் வெளியேற்றப்பட்டனர்

ஹாங்காங்:

இரண்டாம் உலகப் போரின் போது பயன்படுத்தப்பட்ட குண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து, ஹாங்காங்கில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் வெளியேற்றப்பட்டனர்.

ஹாங்காங்கில் இரண்டாம் உலகப் போரின் வெடிகுண்டு ஒரு கட்டுமான இடத்தில் கண்டுபிடிக்கப்பட்டது.

இதை அடுத்து, அதிகாரிகள் ஆயிரக்கணக்கான குடியிருப்பாளர்களை வெளியேற்றியுள்ளனர்.

நேற்று கண்டுபிடிக்கப்பட்ட 450 கிலோகிராம எடையுள்ள வெடிகுண்டு முழுமையாக செயல்படும்.

முறையாகக் கையாளப்படாவிட்டால் உயிரிழப்புகளை ஏற்படுத்தும் திறன் கொண்டது என்றும் போலிசார் தெரிவித்தனர்.

மொத்தத்தில், குவாரி விரிகுடா பகுதியில் உள்ள 18 கட்டிடங்களில் இருந்து 6,000 குடியிருப்பாளர்கள் வெளியேற்றப்பட வேண்டியிருந்தது.

இன்று அதிகாலை, அதிகாரிகளின் உதவியுடன் 2,800 க்கும் மேற்பட்ட குடியிருப்பாளர்கள் வெளியேற்றும் செயல்முறை முடிந்ததாக போலிசார் உறுதிப்படுத்தினர்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset