செய்திகள் உலகம்
சிங்கப்பூரில் விசா விண்ணப்பங்களுக்கு உதவியவருக்கு பாலியல் சேவையை வழங்கியதாக இருவர் மீது குற்றச்சாட்டு
சிங்கப்பூர்:
குடிநுழைவு, சோதனைச் சாவடிகள் ஆணைய அதிகாரி ஒருவருக்கு பாலியல் சேவைகளை வழங்கியதாக இருவர் மீது இன்று சிங்கப்பூர் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டது.
29 வயது ஆர்யா மோனுவும் 21 வயது பரத்தும் இந்தியாவைச் சேர்ந்தவர்கள்.
இருவரும் குறுகிய கால விசாவுக்கு விண்ணப்பித்திருந்தனர். விண்ணப்பங்களில் உதவ அவர்கள் கண்ணன் மோரிஸ் எனும் அதிகாரிக்கு பாலியல் சேவைகளை வழங்கியதாகக் கூறப்படுகிறது. இருவர் மீதும் ஊழல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டிருக்கிறது.
2022ஆம் ஆண்டு டிசம்பர் 24ஆம் தேதியும் 2023ஆம் ஆண்டு பிப்ரவரி 18ஆம் தேதியும் குற்றங்கள் நடந்ததாக நம்பப்படுகிறது.
ஆர்யா குற்றத்தை அக்டோபர் 30ஆம் தேதி ஒப்புக்கொள்ளவிருப்பதாகத் தெரிவித்தார்.
பரத் தாம் குற்றம் செய்யவில்லை என்று கூறியிருக்கிறார்.
விசா விண்ணப்பங்களில் உதவுவதற்குப் பரிமாற்றமாக 6 வெளிநாட்டினரிடம் பாலியல் சேவைகளைப் பெற்றதற்காக கண்ணனுக்கு இம்மாதம் 11ஆம் தேதி 22 மாதச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
ஆதாரம்: CNA
தொடர்புடைய செய்திகள்
December 12, 2025, 12:54 pm
பாகிஸ்தான் உளவுப்பிரிவுத் தலைவருக்கு 14 ஆண்டுச் சிறை
December 12, 2025, 11:13 am
கிறிஸ்துமஸை முன்னிட்டு சாக்லெட்டின் விலை அதிகரிப்பு
December 12, 2025, 9:47 am
பொதுத் தேர்தலுக்கு வழிவிடும் நோக்கில் தாய்லாந்து பிரதமர் நாடாளுமன்றத்தை கலைத்தார்
December 11, 2025, 10:29 am
நியூயார்க்கில் வீடில்லா மக்களுக்கு 30 லட்சம் அமெரிக்க டாலர்கள் வழங்கி சோஹ்ரான் மம்தானி உதவி
December 10, 2025, 2:07 pm
16 வயதுக்குட்பட்டவர்களுக்கான சமூக ஊடக தடையை ஆஸ்திரேலியா முதல் நாடாக அமல்படுத்தியது
December 7, 2025, 11:26 pm
ஆஸ்திரேலியாவில் 70 இடங்களில் காட்டுத்தீ: 350,000 பேர் பாதிப்பு
December 2, 2025, 8:19 am
சமூகச் சேவைக்காக ராயல் கிங்ஸ் குழுமத்தின் கேரி ஹாரிசுக்கு இந்தியத் தூதரக உயர் விருது
November 30, 2025, 8:34 pm
சிங்கப்பூரில் பள்ளி நேரங்களில் கைத்தொலைப்பேசிகளைப் பயன்படுத்த மாணவர்களுக்குத் தடை
November 29, 2025, 11:18 pm
