செய்திகள் உலகம்
உணவகத்தில் சிறுநீர் கழித்த விவகாரம்: $396,000 இழப்பீடு செலுத்த உத்தரவு
பெய்ஜிங்:
சீனாவில் உணவகத்தின் சூப் பாத்திரத்தில் சிறுநீர் கழித்த இளையர்கள் 2.2 மில்லியன் யுவான் இழப்பீடு செலுத்தவேண்டும் என்று தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் கடந்த பிப்ரவரி மாதம் ஷங்ஹாயில் (Shanghai) நடந்தது.
டாங் (Tang), வூ (Wu) என்ற 17 வயது இளையர்கள் Haidilao உணவகத்திற்குச் சாப்பிடச் சென்றனர்.
அப்போது அவர்கள் மேசை மேல் ஏறி நின்று பாத்திரத்திற்குள் சிறுநீர் கழித்தனர்.
அதைக் காணொலியாகப் பதிவுசெய்து சமூக ஊடகத்தில் வெளியிட்டனர்.
அதற்கு இளையர்கள் கடும் கண்டனத்தை எதிர்நோக்கினர்.
உணவகத்தில் சாப்பிட்ட 4,000க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களுக்கு இழப்பீடு வழங்கப்படும் என்று நிறுவனம் கடந்த மார்ச் மாதம் சொன்னது.
பண்ட பாத்திரங்களை மாற்றி உணவகத்தை முழுமையாகச் சுத்தம் செய்ததாகவும் அது தெரிவித்தது.
சம்பவத்தால் ஏற்பட்ட நட்டத்திற்கும் களங்கத்திற்கும் இளையர்கள் இழப்பீடு செலுத்தி பொது மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது.
- ரோஷித் அலி
தொடர்புடைய செய்திகள்
December 12, 2025, 12:54 pm
பாகிஸ்தான் உளவுப்பிரிவுத் தலைவருக்கு 14 ஆண்டுச் சிறை
December 12, 2025, 11:13 am
கிறிஸ்துமஸை முன்னிட்டு சாக்லெட்டின் விலை அதிகரிப்பு
December 12, 2025, 9:47 am
பொதுத் தேர்தலுக்கு வழிவிடும் நோக்கில் தாய்லாந்து பிரதமர் நாடாளுமன்றத்தை கலைத்தார்
December 11, 2025, 10:29 am
நியூயார்க்கில் வீடில்லா மக்களுக்கு 30 லட்சம் அமெரிக்க டாலர்கள் வழங்கி சோஹ்ரான் மம்தானி உதவி
December 10, 2025, 2:07 pm
16 வயதுக்குட்பட்டவர்களுக்கான சமூக ஊடக தடையை ஆஸ்திரேலியா முதல் நாடாக அமல்படுத்தியது
December 7, 2025, 11:26 pm
ஆஸ்திரேலியாவில் 70 இடங்களில் காட்டுத்தீ: 350,000 பேர் பாதிப்பு
December 2, 2025, 8:19 am
சமூகச் சேவைக்காக ராயல் கிங்ஸ் குழுமத்தின் கேரி ஹாரிசுக்கு இந்தியத் தூதரக உயர் விருது
November 30, 2025, 8:34 pm
சிங்கப்பூரில் பள்ளி நேரங்களில் கைத்தொலைப்பேசிகளைப் பயன்படுத்த மாணவர்களுக்குத் தடை
November 29, 2025, 11:18 pm
