நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

உணவகத்தில் சிறுநீர் கழித்த விவகாரம்: $396,000 இழப்பீடு செலுத்த உத்தரவு

பெய்ஜிங்:

சீனாவில் உணவகத்தின் சூப் பாத்திரத்தில் சிறுநீர் கழித்த இளையர்கள் 2.2 மில்லியன் யுவான் இழப்பீடு செலுத்தவேண்டும் என்று தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் கடந்த பிப்ரவரி மாதம் ஷங்ஹாயில் (Shanghai) நடந்தது.

டாங் (Tang), வூ (Wu) என்ற 17 வயது இளையர்கள் Haidilao உணவகத்திற்குச் சாப்பிடச் சென்றனர்.

அப்போது அவர்கள் மேசை மேல் ஏறி நின்று பாத்திரத்திற்குள் சிறுநீர் கழித்தனர்.

அதைக் காணொலியாகப் பதிவுசெய்து சமூக ஊடகத்தில் வெளியிட்டனர்.

அதற்கு இளையர்கள் கடும் கண்டனத்தை எதிர்நோக்கினர்.

உணவகத்தில் சாப்பிட்ட 4,000க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களுக்கு இழப்பீடு வழங்கப்படும் என்று நிறுவனம் கடந்த மார்ச் மாதம் சொன்னது.

பண்ட பாத்திரங்களை மாற்றி உணவகத்தை முழுமையாகச் சுத்தம் செய்ததாகவும் அது தெரிவித்தது.

சம்பவத்தால் ஏற்பட்ட நட்டத்திற்கும் களங்கத்திற்கும் இளையர்கள் இழப்பீடு செலுத்தி பொது மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது.

- ரோஷித் அலி

​​​​​

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset