நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

கொலம்போங்கில் நிலச்சரிவு: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேர் மரணம்

கோத்தா கினபாலு:

கொலம்போங்கில் நிலச்சரிவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேர் மரணமடைந்தனர்.

இங்குள்ள கொலம்போங்கில் உள்ள கம்போங் செண்டரகாசி அருகே நிலச்சரிவு சம்பவம் ஏற்பட்டது.

இந்த நிலச்சரிவில் புதைந்து போயிருக்கலாம் என்று அஞ்சப்படும் ஒரு குடும்பத்தைச் சேர்ந்த ஏழு பேரில் ஐந்து பேர் இன்று பிற்பகல் 3 மணி நிலவரப்படி இறந்து கிடந்தனர்.

முதலில் பலியான ஹுசைமா சரபானி (வயது 50) இன்று மதியம் 12.30 மணிக்கு கண்டுபிடிக்கப்பட்டார்.

மற்ற நான்கு பேர் பிற்பகல் தேடுதல் மற்றும் மீட்புக் குழுவினரின் தேடுதலின் போது கண்டுபிடிக்கப்பட்டனர்.

பாதிக்கப்பட்ட நான்கு பேரில் சித்தி கதீஜா அப்துல்லா, முகமது இல்ஹாம் அப்துல்லா  என அடையாளம் காணப்பட்ட இரண்டு சகோதரர்கள் அடங்குவர்.

மற்றொரு குழந்தை முகமது இசான் காந்தி,  அவர்களின் உறவினர், அவர்களின் தாத்தா அப்துல் ஹாலித் தாரக் ஆகியோரும் மரணமடைந்தனர்.

இதற்கிடையில் இரண்டு குழந்தைகளின் தாய் மஸ்லினா அப்துல் ஹாலித், அவரது மகன் முகமது நோரிமான் அப்துல்லா ஆகியோர்  இரண்டு பாதிக்கப்பட்டவர்களைத் தேடும் பணி தொடர்கிறது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset