நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

தங்கம், நகைகளை வாங்குவதன் மூலம் ஊழல் பணத்தை அரசு ஊழியர்கள் மாற்றுவதை எம்ஏசிசி கண்டறிந்துள்ளது: அஸாம் பாக்கி

கோலாலம்பூர்:

தங்கம், நகைகளை வாங்குவதன் மூலம் ஊழல் பணத்தை அரசு ஊழியர்கள் மாற்றுவதை எம்ஏசிசி கண்டறிந்துள்ளது.

மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின்  தலைமை ஆணையர் டான்ஸ்ரீ அசாம் பாக்கி இதனை கூறினார்.

சிண்டிகேட் வழக்கில் சந்தேகிக்கப்படும் பல அரசு ஊழியர்கள், நகைகள்,  தங்கத்தை வாங்குவதன் மூலம் பெற்ற ஊழல் பணத்தை மோசடி செய்ததாக நம்பப்படுகிறது.

இந்த விஷயத்தை வெளிப்படுத்திய போது,   பல சந்தேக நபர்கள் குற்றத்தை மறைக்க தங்கம், தனிப்பட்ட மதிப்புமிக்க பொருட்களை வாங்கியதாக அவர் கூறினார்.

சமீபத்திய ஓப்ஸ் ரெந்தாஸ் நடவடிக்கையில், வெளிநாட்டினர் நிர்ணயிக்கப்பட்ட நடைமுறைகளைப் பின்பற்றாமல் நாட்டிற்குள் நுழைய அனுமதித்த சிண்டிகேட் வழக்கில் சந்தேக நபர்களிடமிருந்து 2.3 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள பல்வேறு வகையான நகைகளை எம்ஏசிசி கண்டுபிடித்ததாக அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset