நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

சபாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது

கோத்தா கினபாலு:

சபாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

சபாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இன்று காலை 125 குடும்பங்களைச் சேர்ந்த 400 ஆக அதிகரித்துள்ளது.

நேற்று 126 குடும்பங்களைச் சேர்ந்த 391 பேர் பாதிக்கப்பட்டனர்.

பெனாம்பாங்கில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 74 குடும்பங்களைச் சேர்ந்த 247 ஆகக் குறைந்துள்ளது.

 பியூஃபோர்ட்டில் 51 குடும்பங்களைச் சேர்ந்த 153 பேராக அதிகரித்துள்ளது.

சபா மாநில பேரிடர் மேலாண்மைக் குழு ஒரு அறிக்கையில் இதனை  தெரிவித்துள்ளது.

பெனாம்பாங்கில், பாதிக்கப்பட்டவர்கள் மூன்று தற்காலிக வெள்ள நிவாரண மையங்களில் தங்க வைக்கப்பட்டனர்.

அதாவது பெனாம்பாங் விளையாட்டு வளாகம் (36 பேர், ஆறு குடும்பங்கள்), திவான் ஹுகுவான் சியாவ் (147 பேர், 49 குடும்பங்கள்), செயிண்ட் பால் கோலோபிஸ் தேசிய பள்ளியில் (64 பேர், 19 குடும்பங்கள்) என அது குறிப்பிட்டுள்ளது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset