செய்திகள் உலகம்
வெளி நாட்டவர்களை அகற்றக் கோரி லண்டனில் பேரணி: 26 காவல்துறையினர் காயம்
லண்டன்:
லண்டனில் வெளிநாட்டுக் குடியேறிகளுக்கு எதிராக வலசாரி ஆர்வலர் டாமி ராபின்சன் (Tommy Robinson) ஏற்பாடு செய்த பேரணியில் 150,000 பேர் கலந்து கொண்டனர்.
ராபின்சனின் உண்மையான பெயர் ஸ்டீஃபென் யாக்ஸ்லீ-லென்னன் (Stephen Yaxley-Lennon) என்று தெரிவிக்கப்பட்டது. பேரணியில் பேசிய அவர், உள்ளூர் மக்களைவிடச் சட்டவிரோதக் குடியேறிகளுக்கு அதிக உரிமை இருப்பதாகக் குற்றஞ்சாட்டினார்.
பேரணியில் காணொலி மூலம் தோன்றிய செல்வந்தர் இலோன் மஸ்க் (Elon Musk), கட்டுப்படுத்த முடியாத குடியேற்றத்தைப் பற்றிப் பேசினார். பிரிட்டனில் அரசாங்கத்தை மாற்ற வேண்டும் என்றார் அவர்.
வன்முறையில் காவல்துறையைச் சேர்ந்த 26 பேர் காயமுற்றனர். நால்வருக்குக் கடுங்காயங்கள் ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. ஆர்ப்பாட்டக்காரர்களில் 25 பேர் கைதுசெய்யப்பட்டனர்.
இனவாதத்துக்கு எதிராக நடந்த மற்றொரு பேரணியில் 5,000 பேர் கலந்து கொண்டதாக BBC தெரிவித்தது.
ஆதாரம்: BBC
தொடர்புடைய செய்திகள்
December 12, 2025, 12:54 pm
பாகிஸ்தான் உளவுப்பிரிவுத் தலைவருக்கு 14 ஆண்டுச் சிறை
December 12, 2025, 11:13 am
கிறிஸ்துமஸை முன்னிட்டு சாக்லெட்டின் விலை அதிகரிப்பு
December 12, 2025, 9:47 am
பொதுத் தேர்தலுக்கு வழிவிடும் நோக்கில் தாய்லாந்து பிரதமர் நாடாளுமன்றத்தை கலைத்தார்
December 11, 2025, 10:29 am
நியூயார்க்கில் வீடில்லா மக்களுக்கு 30 லட்சம் அமெரிக்க டாலர்கள் வழங்கி சோஹ்ரான் மம்தானி உதவி
December 10, 2025, 2:07 pm
16 வயதுக்குட்பட்டவர்களுக்கான சமூக ஊடக தடையை ஆஸ்திரேலியா முதல் நாடாக அமல்படுத்தியது
December 7, 2025, 11:26 pm
ஆஸ்திரேலியாவில் 70 இடங்களில் காட்டுத்தீ: 350,000 பேர் பாதிப்பு
December 2, 2025, 8:19 am
சமூகச் சேவைக்காக ராயல் கிங்ஸ் குழுமத்தின் கேரி ஹாரிசுக்கு இந்தியத் தூதரக உயர் விருது
November 30, 2025, 8:34 pm
சிங்கப்பூரில் பள்ளி நேரங்களில் கைத்தொலைப்பேசிகளைப் பயன்படுத்த மாணவர்களுக்குத் தடை
November 29, 2025, 11:18 pm
