
செய்திகள் உலகம்
வெளி நாட்டவர்களை அகற்றக் கோரி லண்டனில் பேரணி: 26 காவல்துறையினர் காயம்
லண்டன்:
லண்டனில் வெளிநாட்டுக் குடியேறிகளுக்கு எதிராக வலசாரி ஆர்வலர் டாமி ராபின்சன் (Tommy Robinson) ஏற்பாடு செய்த பேரணியில் 150,000 பேர் கலந்து கொண்டனர்.
ராபின்சனின் உண்மையான பெயர் ஸ்டீஃபென் யாக்ஸ்லீ-லென்னன் (Stephen Yaxley-Lennon) என்று தெரிவிக்கப்பட்டது. பேரணியில் பேசிய அவர், உள்ளூர் மக்களைவிடச் சட்டவிரோதக் குடியேறிகளுக்கு அதிக உரிமை இருப்பதாகக் குற்றஞ்சாட்டினார்.
பேரணியில் காணொலி மூலம் தோன்றிய செல்வந்தர் இலோன் மஸ்க் (Elon Musk), கட்டுப்படுத்த முடியாத குடியேற்றத்தைப் பற்றிப் பேசினார். பிரிட்டனில் அரசாங்கத்தை மாற்ற வேண்டும் என்றார் அவர்.
வன்முறையில் காவல்துறையைச் சேர்ந்த 26 பேர் காயமுற்றனர். நால்வருக்குக் கடுங்காயங்கள் ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. ஆர்ப்பாட்டக்காரர்களில் 25 பேர் கைதுசெய்யப்பட்டனர்.
இனவாதத்துக்கு எதிராக நடந்த மற்றொரு பேரணியில் 5,000 பேர் கலந்து கொண்டதாக BBC தெரிவித்தது.
ஆதாரம்: BBC
தொடர்புடைய செய்திகள்
September 12, 2025, 9:54 pm
சிங்கப்பூர் ஆர்ச்சர்ட் ரோட்டிலுள்ள Liat Towers கூரை பெரும் சப்தத்துடன் விழுந்தது: கர்ப்பிணி காயம்
September 12, 2025, 9:24 pm
ஜப்பானில் 100 வயதைத் தொட்டவர்களின் எண்ணிக்கை சுமார் 100,000
September 12, 2025, 9:16 pm
பிரேசில் முன்னாள் அதிபர் போல்சனாரோவுக்கு 27 ஆண்டுகள் சிறை
September 12, 2025, 8:47 pm
கத்தார் தாக்குதல் இஸ்ரேலுக்கு இந்தியா கண்டனம்
September 11, 2025, 5:20 pm
விசா விண்ணப்பித்தவர்களிடம் பாலியல் சேவை பெற்ற ICA அதிகாரிக்கு 22 மாதச் சிறை
September 11, 2025, 3:46 pm
நூலிழையில், ஹெலிகாப்டர் கயிறு மூலம் தப்பிய நேபாள அமைச்சர், குடும்பம்
September 11, 2025, 12:42 pm