
செய்திகள் மலேசியா
சிங்கப்பூரில் மரணத் தண்டனையை எதிர்நோக்கியுள்ள 4 மலேசியர்களின் விவகாரத்தில் அரசாங்கம் தலையிட வேண்டும்: சுஹாகாம்
கோலாலம்பூர்:
சிங்கப்பூரில் மரணத் தண்டனையை எதிர்நோக்கியுள்ள 4 மலேசியர்களின் விவகாரத்தில் அரசாங்கம் தலையிட வேண்டும்.
சுஹாகாம் ஓர் அறிக்கையில் இதனை தெரிவித்தது.
சிங்கப்பூரில் போதைப்பொருள் கடத்தல் குற்றத்திற்காக நான்கு மலேசியர்களுக்கு மரண தண்டனையை எதிர்நோக்கி உள்ளனர்.
அவர்களின் மரணத் தண்டனையை நிறைவேற்றுவதில் அரசாங்கம் தலையிட வேண்டும்.
கே. தட்சிணாமூர்த்தி, பி. பன்னீர் செல்வம், எஸ். சாமிநாதன், ஆர். லிங்கேஸ்வரன் ஆகிய நான்கு பேர் இத்தண்டனையை எதிர்நோக்கியுள்ளனர்.
சுஹாகாம் மரண தண்டனைக்கு எதிரான தனது நிலைப்பாட்டை மீண்டும் வலியுறுத்தியது.
அனைத்து குற்றவாளிகளுக்கும் நீதி, கண்ணியம், மறுவாழ்வு ஆகியவற்றில் நம்பிக்கை கொண்டுள்ளதாகக் கூறியது.
சர்வதேச சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் உடன்படிக்கை கடுமையான குற்றங்களுக்கு மரண தண்டனையை அனுமதிக்கும்.
அதே வேளையில், போதைப்பொருள் தொடர்பான குற்றங்கள் அந்த வகைக்குள் வராது என்று ஐ.நா மனித உரிமைகள் குழு தொடர்ந்து தீர்ப்பளித்து வருகிறது.
எனவே, வெளிநாடுகளில் மரண தண்டனையை எதிர்கொள்ளும் மலேசியர்களின் உரிமைகள், உயிர்களைப் பாதுகாக்க அனைத்து சாத்தியமான இராஜதந்திர, சட்ட நடவடிக்கைகளையும் எடுக்குமாறு சுஹாகாம் அரசாங்கத்தை வலியுறுத்துகிறது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
September 10, 2025, 8:47 pm
சட்டத்துறை தலைவர், அரசு வழக்கறிஞர்கள் ஆகியோரின் அதிகாரங்களைப் பிரிக்க அரசாங்கம் ஒப்புக் கொண்டது: ஃபஹ்மி
September 10, 2025, 5:38 pm
சட்டத்துறை தலைவர், அரசு தரப்பு வழக்கறிஞர்கள் ஆகியோரின் அதிகாரங்களைப் பிரிக்க அரசாங்கம் ஒப்புக் கொண்டது: ஃபஹ்மி
September 10, 2025, 5:36 pm
அமைச்சர்கள், துணை அமைச்சர்களின் வெளிநாட்டுப் பயணங்களை தற்காலிகமாக நிறுத்த பிரதமர் உத்தரவிட்டார்: ஃபஹ்மி
September 10, 2025, 5:35 pm
டான்ஸ்ரீ மொஹைதினின் மருமகன் மேற்காசியாவில் இருப்பதாக நம்பப்படுகிறது: டான்ஸ்ரீ அஸாம் பாக்கி
September 10, 2025, 5:33 pm
தம்பூன் மகா மாரியம்மன் ஆலயத்தில் கந்தர் விழா 8.0: விமரிசையாக நடைபெற்றது
September 10, 2025, 5:29 pm
பெர்சத்து தலைமைத்துவத்திற்கு கட்சி உறுப்பினர்கள் அனைவரும் முழு ஆதரவை தர வேண்டும்: டத்தோ சரவணக்குமார்
September 10, 2025, 5:28 pm
ஈப்போ கல்லுமலை சுப்பிரமணியர் ஆலய வளாகத்தில் குருந்த மரம் நடப்பட்டது: டத்தோஸ்ரீ சரவணன் தலைமையேற்றார்
September 10, 2025, 2:48 pm