
செய்திகள் மலேசியா
அமைச்சர்கள், துணை அமைச்சர்களின் வெளிநாட்டுப் பயணங்களை தற்காலிகமாக நிறுத்த பிரதமர் உத்தரவிட்டார்: ஃபஹ்மி
புத்ராஜெயா:
அமைச்சர்கள், துணை அமைச்சர்களின் வெளிநாட்டுப் பயணங்களை தற்காலிகமாக நிறுத்த பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் உத்தரவிட்டார்.
தகவல் தொடர்பு அமைச்சரும் அரசாங்க பேச்சாளருமான ஃபஹ்மி ஃபட்சில் இதனை கூறினார்.
2026ஆம் ஆண்டுக்கான பட்ஜெட், 47ஆவது ஆசியான் உச்ச நிலைமாநாட்டிற்கான ஏற்பாடுகளில் முழு கவனம் செலுத்தப்படுவதை உறுதி செய்யப்பட வேண்டும்.
இதனால் அமைச்சர்கள், துணை அமைச்சர்களின் அனைத்து வெளிநாட்டுப் பயணங்களையும் தற்காலிகமாக நிறுத்த அவர் உத்தரவிட்டார்.
உடனடியாக அமலுக்கு வரும் இந்த உத்தரவு, திட்டமிடப்பட்ட கூட்டங்கள் அல்லது அமைச்சரவையால் சிறப்புக் கருத்தில் கொள்ளப்படும் விஷயங்களை விலக்குகிறது.
இது, அமைச்சர்கள் பல திட்டங்களை செயல்படுத்துவதில் கவனம் செலுத்தி முன்னுரிமை அளிப்பதை உறுதி செய்கிறது.
மேலும் அக்டோபர் 10 ஆம் தேதி பிரதமரால் தாக்கல் செய்யப்படும் 2026 பட்ஜெட்டுக்கான தயாரிப்புகளையும் உறுதி செய்யும்.
இன்றைய அமைச்சரவைக் கூட்டத்திற்குப் பிந்தைய செய்தியாளர் கூட்டத்தில் பேசிய அவர் இவ்வாறு கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
September 10, 2025, 8:47 pm
சட்டத்துறை தலைவர், அரசு வழக்கறிஞர்கள் ஆகியோரின் அதிகாரங்களைப் பிரிக்க அரசாங்கம் ஒப்புக் கொண்டது: ஃபஹ்மி
September 10, 2025, 5:38 pm
சட்டத்துறை தலைவர், அரசு தரப்பு வழக்கறிஞர்கள் ஆகியோரின் அதிகாரங்களைப் பிரிக்க அரசாங்கம் ஒப்புக் கொண்டது: ஃபஹ்மி
September 10, 2025, 5:35 pm
டான்ஸ்ரீ மொஹைதினின் மருமகன் மேற்காசியாவில் இருப்பதாக நம்பப்படுகிறது: டான்ஸ்ரீ அஸாம் பாக்கி
September 10, 2025, 5:33 pm
தம்பூன் மகா மாரியம்மன் ஆலயத்தில் கந்தர் விழா 8.0: விமரிசையாக நடைபெற்றது
September 10, 2025, 5:29 pm
பெர்சத்து தலைமைத்துவத்திற்கு கட்சி உறுப்பினர்கள் அனைவரும் முழு ஆதரவை தர வேண்டும்: டத்தோ சரவணக்குமார்
September 10, 2025, 5:28 pm
ஈப்போ கல்லுமலை சுப்பிரமணியர் ஆலய வளாகத்தில் குருந்த மரம் நடப்பட்டது: டத்தோஸ்ரீ சரவணன் தலைமையேற்றார்
September 10, 2025, 2:48 pm