நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஈப்போ கல்லுமலை சுப்பிரமணியர் ஆலய வளாகத்தில் குருந்த மரம் நடப்பட்டது: டத்தோஸ்ரீ சரவணன் தலைமையேற்றார்

ஈப்போ:

மாணிக்கவாசகர் இறைவனிடமிருந்து சிவஞானம் பெற்ற  குருந்த மரம், பேரா ஈப்போவில் உள்ள கல்லுமலை சுப்பிரமணியர் ஆலய வளாகத்தில்  நடப்பட்டது.

அந்த மரத்தை அன்பளிப்புச் செய்த மஇகா தேசியத் துணைத் தலைவர் டத்தோஸ்ரீ எம். சரவணன் ஆலயத்திற்கு சிறப்புச் வருகை புரிந்து அந்த மரத்தை நட்டார் .

ஆன்மீகத்தில் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படும் குருந்த மரம் நடும் விழாவில் பெரும் திரளானோர் கலந்துக் கொண்டனர்.

இந்த நிகழ்வில் ஈப்போ இந்து தேவஸ்தான பரிபாலன சபா   நிர்வாக உறுப்பினர்கள் வருகை அளித்தனர்.

குருந்த மரம் என்பது ஒரு வகையான காட்டுக் மரம் (Wild Orange Tree), இதன் தாவரவியல் பெயர் அடலான்ஷியா மிசியோனிஸ் (Adansonia madagascariensis) ஆகும், 

இது ரூடேசி (Rutaceae) வகையைச் சேர்ந்தது. இந்த மரமானது தமிழ் இலக்கியத்திலும் ஆன்மீகத்திலும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

மாணிக்கவாசகர் குருந்த மரத்தின் கீழ் நின்று இறைவனிடமிருந்து சிவஞானம் பெற்ற மரம் என்று டத்தோஸ்ரீ சரவணன் தெரிவித்தார்.

மருத்துவ குணங்கள் நிறைந்த இந்த மரம், ஆற்றங்கரைகளில் வளரும் ஒருவகையான காட்டு மரமாகும்.  

பல சிவாலயங்களில் குருந்த மரங்கள் தல மரங்களாக உள்ளன, 
மருத்துவ குணங்கள் நிறைந்தது எனவும், பல்வேறு நோய்களுக்குப் பயன்படும் என்றும் கூறப்படுகிறது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset