செய்திகள் உலகம்
அமெரிக்காவின் வர்த்தக போருக்கு எதிராக ஒன்றிணைய வேண்டும்: பிரிக்ஸ் கூட்டத்தில் சீனா அழைப்பு
பெய்ஜிங்:
அமெரிக்காவின் வரிப் போருக்கு எதிராக பிரிக்ஸ் நாடுகள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்று சீன அதிபர் ஷி ஜின்பிங்.
பிரேஸில் அதிபர் லூலா டசில்வா தலைமையில் ரஷியா, இந்தியா, சீனா, தென் ஆப்பிரிக்கா உள்ளிட்ட நாடுகளின் தலைவர்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் காணொலி மூலம் நடைபெற்றது.
இதில் பேசிய சீன அதிபர் ஷி ஜின்பிங், ஒரு சில நாடுகளால் நடத்தப்படும் வர்த்தக மற்றும் வரிப் போர்கள் உலகப் பொருளாதாரத்தைச் சீர்குலைத்து, சர்வதேச வர்த்தக விதிகளைப் பலவீனப்படுத்துகின்றன.
தெற்குலக நாடுகளின் முன்னணி அமைப்பான பிரிக்ஸ், வெளிப்படைத்தன்மை, அனைவரையும் உள்ளடக்கிய அணுகுமுறை, பரஸ்பர வெற்றிக்கான ஒத்துழைப்பு, பலதரப்புவாதம் ஆகியவற்றை இணைந்து பாதுகாக்க வேண்டும்.
பிரிக்ஸ் நாடுகள் எவ்வளவு நெருக்கமாக இணைந்து செயல்படுகிறோமோ, அந்தளவுக்கு நெகிழ்வாகவும், வளங்கள் நிறைந்ததாகவும், வெளிப்புற அபாயங்களையும் சவால்களையும் சமாளிப்பதில் திறமையாகவும் இருக்க வேண்டும். இதனால் இந்த நாட்டு மக்களுக்கு அதிக பயன்கள் கிடைக்கும் என்றார்.
மாநாட்டில் பேசிய இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், பிரிக்ஸ் உறுப்பு நாடுகளுக்கு இடையேயான வர்த்தகப் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய வேண்டும் என்றார்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
December 12, 2025, 12:54 pm
பாகிஸ்தான் உளவுப்பிரிவுத் தலைவருக்கு 14 ஆண்டுச் சிறை
December 12, 2025, 11:13 am
கிறிஸ்துமஸை முன்னிட்டு சாக்லெட்டின் விலை அதிகரிப்பு
December 12, 2025, 9:47 am
பொதுத் தேர்தலுக்கு வழிவிடும் நோக்கில் தாய்லாந்து பிரதமர் நாடாளுமன்றத்தை கலைத்தார்
December 11, 2025, 10:29 am
நியூயார்க்கில் வீடில்லா மக்களுக்கு 30 லட்சம் அமெரிக்க டாலர்கள் வழங்கி சோஹ்ரான் மம்தானி உதவி
December 10, 2025, 2:07 pm
16 வயதுக்குட்பட்டவர்களுக்கான சமூக ஊடக தடையை ஆஸ்திரேலியா முதல் நாடாக அமல்படுத்தியது
December 7, 2025, 11:26 pm
ஆஸ்திரேலியாவில் 70 இடங்களில் காட்டுத்தீ: 350,000 பேர் பாதிப்பு
December 2, 2025, 8:19 am
சமூகச் சேவைக்காக ராயல் கிங்ஸ் குழுமத்தின் கேரி ஹாரிசுக்கு இந்தியத் தூதரக உயர் விருது
November 30, 2025, 8:34 pm
சிங்கப்பூரில் பள்ளி நேரங்களில் கைத்தொலைப்பேசிகளைப் பயன்படுத்த மாணவர்களுக்குத் தடை
November 29, 2025, 11:18 pm
