செய்திகள் உலகம்
காத்மாண்டு விமான நிலையம் மூடல்: ஏர் இந்தியா, இண்டிகோ, ஸ்பைஸ் ஜெட் விமான சேவைகள் நிறுத்தம்
புதுடெல்லி:
நேபாளத்தில் போராட்டம் தீவிரமடைந்துள்ளதால், அந் நாட்டின் தலைநகர் காத்மாண்டுக்கான விமான சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளது.
பேஸ்புக், யூ டியூப், எக்ஸ் உள்ளிட்ட சமூக வலைதளங்களுக்கு நேபாள அரசு திடீர் தடை விதித்ததை எதிர்த்து நேற்று நடைபெற்ற வன்முறையில் 19 பேர் உயிரிழந்தனர். 200-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
இரண்டாவது நாளாக இன்று போராட்டம் தீவிரமடைந்தது. சமூக ஊடக தடைக்கு எதிரான போராட்டம், ஊழலுக்கு எதிரான போராட்டமாகவும் வலுப்பெற்றதோடு, அரசாங்கத்துக்குள்ளும் எதிர்ப்புகள் எழுந்ததை அடுத்து பிரதமர் கே.பி.சர்மா ஒலி இன்று பிற்பகல் தனது பதவியை ராஜினாமா செய்தார்.
நேபாள தலைநகரான காத்மாண்டுவில் உள்ள திரிபுவன் சர்வதேச விமான நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதால், ஏர் இந்தியா, இண்டிகோ, ஸ்பைஸ் ஜெட் ஆகிய விமான நிறுவனங்கள் காத்மாண்டுவுக்கான தங்கள் சேவைகளை ரத்து செய்தன.
போராட்டக்காரர்களால் ஏற்பட்ட தீயினால் உருவான புகை மூட்டத்தால், காத்மாண்டு விமான நிலையம் மூடப்பட்டுள்ளது.
இதனையடுத்து, "காத்மாண்டுவில் நிலவும் தற்போதைய சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, டெல்லி - காத்மாண்டு - டெல்லி வழித்தடத்தில் இயக்கப்படும் AI2231/2232, AI2219/2220, AI217/218, AI211/212 விமானங்கள் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளன" என்று ஏர் இந்தியா தெரிவித்துள்ளது.
மேலும், நிலைமையை உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாகவும் விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதேபோன்று இண்டிகோ தனது அறிக்கையில், "காத்மாண்டுவிற்குச் செல்லும், அங்கிருந்து புறப்படும் அனைத்து விமானங்கள் அனைத்தும் தற்போது நிறுத்தப்பட்டுள்ளன" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல, காத்மாண்டுக்கான விமானங்கள் ரத்து செய்யப்படுவதாகவும் ஸ்பைஸ் ஜெட் விமான நிறுவனம் அறிவித்துள்ளது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
December 12, 2025, 12:54 pm
பாகிஸ்தான் உளவுப்பிரிவுத் தலைவருக்கு 14 ஆண்டுச் சிறை
December 12, 2025, 11:13 am
கிறிஸ்துமஸை முன்னிட்டு சாக்லெட்டின் விலை அதிகரிப்பு
December 12, 2025, 9:47 am
பொதுத் தேர்தலுக்கு வழிவிடும் நோக்கில் தாய்லாந்து பிரதமர் நாடாளுமன்றத்தை கலைத்தார்
December 11, 2025, 10:29 am
நியூயார்க்கில் வீடில்லா மக்களுக்கு 30 லட்சம் அமெரிக்க டாலர்கள் வழங்கி சோஹ்ரான் மம்தானி உதவி
December 10, 2025, 2:07 pm
16 வயதுக்குட்பட்டவர்களுக்கான சமூக ஊடக தடையை ஆஸ்திரேலியா முதல் நாடாக அமல்படுத்தியது
December 7, 2025, 11:26 pm
ஆஸ்திரேலியாவில் 70 இடங்களில் காட்டுத்தீ: 350,000 பேர் பாதிப்பு
December 2, 2025, 8:19 am
சமூகச் சேவைக்காக ராயல் கிங்ஸ் குழுமத்தின் கேரி ஹாரிசுக்கு இந்தியத் தூதரக உயர் விருது
November 30, 2025, 8:34 pm
சிங்கப்பூரில் பள்ளி நேரங்களில் கைத்தொலைப்பேசிகளைப் பயன்படுத்த மாணவர்களுக்குத் தடை
November 29, 2025, 11:18 pm
