நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

அணுசக்தியை அறிமுகப்படுத்தும் அரசாங்கத்தின் திட்டத்தில் வெளிப்படைத்தன்மை வேண்டும்: சார்லஸ்

கோலாலம்பூர்:

அணுசக்தியை அறிமுகப்படுத்தும் அரசாங்கத்தின் திட்டத்தில் வெளிப்படைத்தன்மை வேண்டும்.

முன்னாள் கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர் சார்லஸ் சந்தியாகோ இதனை கூறினார்.

அணு உலைகள், கழிவு தளங்களை கட்டத் திட்டமிட்டுள்ள இடத்தை அரசாங்கம் வெளியிட வேண்டும்.

மேலும்  பொதுமக்களின் நம்பிக்கையைப் பெறுவதற்கு வெளிப்படைத்தன்மை அவசியமாகும்.

அடுத்த 10 ஆண்டுகளில் அணுசக்தியை அறிமுகப்படுத்தும் அரசாங்கத்தின் திட்டங்களுக்கு பதிலளித்த அவர், 

அணுசக்தியை நீக்குதல், நீண்டகால கழிவு மேலாண்மை உள்ளிட்ட முழு செலவு-பயன் பகுப்பாய்வையும் பொதுமக்களுக்கு வெளியிட வேண்டும்.

மேலும் அதே முதலீட்டிற்கான செலவுகளை சூரிய சக்தியுடன் ஒப்பிடுகிறதா? என்பதை பார்க்க மக்கள் தகுதியானவர்கள் என்று அவர் ஒரு சமூக ஊடகப் பதிவில் கூறினார்.

முன்னதாக நேற்று இரவு, துணைப் பிரதமர் ஃபாடில்லா யூசோப், சமீபத்திய ஆசிய பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு எரிசக்தி அமைச்சர்கள் கூட்டத்தில், 

தூய்மையான, நம்பகமான எரிசக்திக்கான சாத்தியமான விருப்பமாக அணுசக்தி அங்கீகரிக்கப்பட்டதாகக் கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset