
செய்திகள் மலேசியா
மொஹைதின் குற்றச்சாட்டுகளை MCMC இன்னும் விசாரித்து வருகிறது: டிக் டாக்கின் தகவலுக்காகக் காத்திருக்கிறது
சைபர்ஜெயா:
முன்னாள் பிரதமர் டான்ஸ்ரீ மொஹைதின் யாசிம் குற்றச்சாட்டுகளை எம்சிஎம்சி இன்னும் விசாரித்து வருகிறது.
டிக் டாக்கின் தகவலுக்காகக் காத்திருக்கிறது என்று அவ்வாணையம் ஓர் அறிக்கையில் கூறியது.
எம்சிஎம்சி எனப்படும் மலேசிய தொடர்பு, பல்லூடக ஆணையம் டான்ஸ்ரீ மொஹைதின் யாசினுக்கு ரோன் 95 மானிய விவகாரத்தில் தொடர்பு இருப்பதாக எழுந்த குற்றச்சாட்டுகளை இன்னும் விசாரித்து வருகிறது.
மேலும் சமூக ஊடக தள வழங்குநருடன் இணைந்து டிக் டாக்கில் வைரலாகும் உள்ளடக்கம் குறித்த ஆரம்ப மதிப்பாய்வு மேற்கொள்ளப்பட்டது.
இருப்பினும், விசாரணையை முடிக்க டிக் டோக்கிலிருந்து கூடுதல் தகவலுக்காக எம்சிஎம்சி இன்னும் காத்திருக்கிறது.
இன்றுவரை, பெறப்பட்ட விசாரணை முடிவுகள் மேலதிக விசாரணை, அறிவுறுத்தல்களுக்காக துணை அரசு வழக்கறிஞருக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளன.
விசாரணை முழு நேர்மையுடனும், தற்போதுள்ள சட்ட விதிகளின்படியும் மேற்கொள்ளப்படுவதை உறுதிசெய்ய எம்சிஎம்சி அதிகாரிகளுடன் தொடர்ந்து ஒத்துழைக்கும் என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
September 9, 2025, 6:30 pm
மலேசிய இந்திய டிஜே கலைஞர்களை ஊக்குவிக்கும் நோக்கில் மாபெரும் பீட் தலைவன் போட்டி: குணராஜ் அறிவிப்பு
September 9, 2025, 6:04 pm
ஷாரா கைரினாவின் மரணத்திற்கு எச்ஐஇ சிக்கல்களுடன் கூடிய கடுமையான மூளைக் காயமே காரணம்: டாக்டர் பவன்குமார்
September 9, 2025, 6:00 pm
இந்து சமயம், ஆலயங்கள், தமிழ்ப்பள்ளிகளின் வளர்ச்சிக்கு அரசாங்கத்தின் நிதி உதவிகள் தொடரும்: சிவநேசன்
September 9, 2025, 1:58 pm
டுரியான் துங்கால் செமாபோக் பெர்டானா பாலர்பள்ளியில் சுதந்திர தினப் பேரணி
September 9, 2025, 1:19 pm
துன் மகாதீர் சொத்துக்கள் குறித்து எம்ஏசிசி இங்கிலாந்திடம் இருந்து தகவல்களைக் கோரியுள்ளது
September 9, 2025, 1:10 pm